மேட்டூர் அணை நீர்வரத்து 1.30 லட்சம் கன அடியாக உயர்வு..!

Default Image

மேட்டூர் அணை  நீர்மட்டம் 1.30 லட்சம் கன அடியாக உயர்ந்துள்ளது.

கர்நாடகாவில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், காவிரி பிறக்கும் இடமான குடகு உள்ளிட்ட பகுதிகளிலும் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் தொடர்ந்து கனமழை பெய்துவருகிறது, மேலும் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலும்தொடர் கனமழை பெய்து வருவதால் கர்நாடக அணைகளில் இருந்து உபரி நீர் காவிரி ஆற்றில் அதிக அளவில் திறக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் காரணமாக மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் அந்தவகையில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 5 அடி ஒரே நாளில் உயர்ந்து 81 அடியாக உயர்ந்துள்ளது, மேலும் நீர் இருப்பு 43.06 டிஎம்சி. ஆக தற்பொழுது உள்ளது. மேலும் அணையில் இருந்து விவசாய பாசனத்திற்கு வினாடிக்கு 1,000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

மேலும் நேற்று காலை 90 அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை ஒரு லட்சத்தி 30,000 கன அடியாக அதிகரித்துள்ளது, மேலும் மேட்டூர் அணையின் நீர்மட்டம் கடந்த மூன்று தினங்களில் 22 அடி உயர்ந்துள்ளது, மேலும்  ஒரேநாளில் 11 அடியாக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

student -10th mark
tvk manimaran
Harry Brook - Jamie Smith
vijay - chennai hc
Dog Bite Rabies
Nikitha