அனைத்து திட்டங்களையும் மாதந்தோறும் கண்காணிப்பேன் – முதலமைச்சர் மு.க ஸ்டாலின்

Chief Minister Stalin informed that no project will stop with mere announcement and all projects will be monitored on a monthly basis.

வெறும் அறிவிப்போடு எந்த திட்டமும் நின்றுவிடாது, அனைத்து திட்டங்களையும் மாதந்தோறும் கண்காணிப்பேன் என முதலமைச்சர் ஸ்டாலின் தகவல்.

ஒரு கால பூஜை திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் 12,959 திருக்கோயில்களில் பணிபுரியும் அர்ச்சகர்கள், பட்டாச்சியார்கள், பூசாரிகளுக்கு தமிழக அரசின் சார்பில் மாதந்தோறும் ரூ.1,000 ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை சென்னையில் தொடங்கி வைத்த பின் பேசிய முதல்வர் முக ஸ்டாலின், கோயில்களில் பணிபுரியும் ஊழியர்கள், அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்களுக்கு மாதம்தோறும் ஊக்கத் தொகை திட்டம் அறிவிக்கப்பட்ட ஒரே வாரத்தில் அமல்படுத்தி உள்ளோம் .

இந்து சமயஅறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும், அறநிலையத்துறை 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது எனவும் கூறினார். மேலும், தமிழக சட்டமன்றத்தில் என்னென்ன திட்டங்கள் அறிவிக்கப்பட்டதோ, அனைத்தையும் நிறைவேற்ற திட்டமிட்டு உள்ளோம். வெறும் அறிவிப்போடு எந்த திட்டமும் நின்றுவிடாது, அனைத்து திட்டங்களையும் மாதந்தோறும் கண்காணிப்பேன் என்றும் தெரிவித்தார்.