நெல்லை கவின் கொலை: உடலை வாங்க மறுத்து 3-வது நாளாக உறவினர்கள் போராட்டம்!

நெல்லை கவின் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு இயக்குனர்கள் பா.ரஞ்சித் மற்றும், மாரிசெல்வராஜ் ஆகியோர் தங்களுடைய கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.

nellai kavin case

திருநெல்வேலி : மாவட்டம், ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்த கவின் செல்வ கணேஷ் (வயது 27), சென்னையில் பிரபல ஐ.டி. நிறுவனமான டி.சி.எஸ்-இல் பொறியியல் பட்டதாரியாகப் பணியாற்றி வந்தவர். தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த இவர், தனது தாத்தாவுக்கு உடல்நலக் குறைவு காரணமாக ஜூலை 27, 2025 அன்று நெல்லை மாநகர், கே.டி.சி. நகர், அஷ்டலட்சுமி தெருவில் உள்ள ஒரு சித்த மருத்துவமனைக்கு அழைத்து வந்திருந்தார். மருத்துவமனை வாசலில் காத்திருந்தபோது, பாளையங்கோட்டையைச் சேர்ந்த சுர்ஜித் (வயது 21) என்பவர் கவினை அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்தார்.

இந்தக் கொலை சாதி அடிப்படையிலான ஆணவக் கொலையாகக் கருதப்படுகிறது, ஏனெனில் கவின் ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர், மற்றும் சுர்ஜித்தின் சகோதரியுடன் கவினுக்கு காதல் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த காதல் , சுர்ஜித்தின் குடும்பத்தினரால் எதிர்க்கப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

கவின் செல்வ கணேஷ் கொலை செய்யப்பட்டதை அறிந்து, பாளையங்கோட்டை காவல் நிலையத்தைச் சேர்ந்த காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து, கவினின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், கொலையை நிகழ்த்தியவர் சுர்ஜித் என்பது உறுதியானது.

சுர்ஜித்தின் தந்தை சரவணன், மணிமுத்தாறு பட்டாலியனில் காவல் உதவி ஆய்வாளராகவும், தாயார் கிருஷ்ணகுமாரி, ராஜபாளையம் பட்டாலியனில் காவல் உதவி ஆய்வாளராகவும் பணியாற்றி வருகின்றனர். இந்தக் கொலைக்கு காரணம், கவினுக்கும் சுர்ஜித்தின் சகோதரிக்கும் இடையேயான நட்பு மற்றும் அதற்கு சுர்ஜித்தின் குடும்பத்தினரின் எதிர்ப்பு என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, கவின் செல்வ கணேஷின் உடலைப் பெற மறுத்து, அவரது பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் மூன்றாவது நாளாக (ஜூலை 30, 2025) போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். “நிதி வேண்டாம், நீதி வேண்டும்” எனக் கூறி, அரசு அறிவித்த நிவாரணத் தொகையை ஏற்க மறுத்துள்ளனர். குறிப்பாக, சுர்ஜித்தின் பெற்றோர்களான சரவணன் மற்றும் கிருஷ்ணகுமாரி ஆகியோரையும் கைது செய்ய வேண்டும் எனவும், அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றனர்.

இதற்கு ஆதரவாக, புதிய தமிழகம் கட்சி உள்ளிட்ட அரசியல் அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் இணைந்து, ஜூலை 31, 2025 அன்று நெல்லையில் மாபெரும் ஆர்ப்பாட்டத்தை அறிவித்துள்ளனர். போராட்டத்தைத் தணிக்க, துணைக் காவல் கண்காணிப்பாளர் (டி.எஸ்.பி) பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். கவினின் உறவினர்கள், நீதி கிடைக்கும் வரை தங்கள் போராட்டத்தைத் தொடர உறுதியாக உள்ளனர்.

மேலும், இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக (A1) சரவணன், இரண்டாவது குற்றவாளியாக (A2) கிருஷ்ணகுமாரி, மற்றும் மூன்றாவது குற்றவாளியாக (A3) சுர்ஜித் ஆகியோரின் பெயர்கள் முதல் தகவல் அறிக்கையில் (FIR) சேர்க்கப்பட்டுள்ளன. சரவணன் மற்றும் கிருஷ்ணகுமாரி ஆகியோர் காவல் உதவி ஆய்வாளர்களாக இருப்பதால், அவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்