இதை செய்தால் தான் பாஜக ஆட்சியை தூக்கி எறிய முடியும்.! திருமாவளவன் பேட்டி.

அரியலூர்: 2024 மக்களவை தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின. இதில் தமிழகத்தில் சிதம்பரம் தொகுதியில் திமுக கூட்டணி ஆதரவுடன் போட்டியிட்ட விசிக தலைவர் திருமாவளவன்

அரியலூர்:2024 மக்களவை தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின. இதில் தமிழகத்தில் சிதம்பரம் தொகுதியில் திமுக கூட்டணி ஆதரவுடன் போட்டியிட்ட விசிக தலைவர் திருமாவளவன் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

தேர்தல் அலுவலரிடம் தனது வெற்றி சான்றிதழை வாங்கிய பிறகு, திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசுகையில், தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு, ஐக்கிய ஜனதா தளம் கட்சி தலைவர் நிதிஷ்குமார், சிவசேனா கட்சி தலைவர் ஏக்நாத் ஷிண்டே, பிஜு ஜனதா தளம் கட்சி தலைவர் நவீன் பட்நாயக் ஆகியோர் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணியில் இணைய வேண்டும்.

அவ்வாறு இணைந்து செயல்பட்டால் மட்டுமே 10 ஆண்டுகால இருட்ட ஆட்சியை, மக்கள் விரோத பாஜக ஆட்சியை நாட்டில் இருந்து அகற்ற முடியும் என திருமாவளவன் அரியலூரில் பேட்டியளித்துள்ளார்.