பாஜகவுடன் இனி எந்தக் காலத்திலும் கூட்டணி இல்லை – இபிஎஸ்

ADMK Chief Secretary Edappadi Palanisamy

அதிமுக 52வது ஆண்டில் அடியெடுத்து வைப்பதை முன்னிட்டுசென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் உள்ள எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா சிலைகளுக்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதையடுத்து, அதிமுக மாவட்ட பொறுப்பாளர்களுடன் பூத் கமிட்டி அமைத்தல், மகளிர் அமைப்புகளை ஏற்படுத்துதல் குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார். முன்னாள் அமைச்சர்கள் முனுசாமி, நத்தம் விஸ்வநாதன் உள்பட 82 பேர் பூத் கமிட்டி மாவட்ட பொறுப்பாளர்களாக உள்ளனர்.

நடாளுமன்ற மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அதிமுக மாவட்ட பொறுப்பாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், நிறைய கட்சிகள் கூட்டணிக்கு வர விருப்பம் தெரிவித்துள்ளது. பாஜகவுடன் இனி எந்தக் காலத்திலும் கூட்டணி இல்லை.

பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று மக்களிடம் அழுத்தம் திருத்தமாக எடுத்து சொல்லுங்கள். தேர்தல் பணியில் மாவட்ட செயலர்கள் தலையீடு இருந்தால் புகாரளிக்கலாம் எனவும் அறிவுறுத்தினார். மேலும், வரும் நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் 40 நாடாளுமன்றத் தொகுதிகளையும் கைப்பற்ற பணியாற்ற வேண்டும் எனவும் கூறினார். இதனிடையே, மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டத்துக்கு பிறகு செய்தியாளர் சந்திப்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அதிமுக மாவட்ட பொறுப்பாளர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.

நமது ஒரே எதிரியான திமுகவை தோற்கடிப்பது தான் இலக்கு. தமிழ்நாட்டில் யாருக்கும் பாதுகாப்பு இல்லாத ஆட்சி நடைபெறுகிறது. லியோ பட விவகாரத்தில் வேண்டுமென்றே தொல்லை கொடுக்கின்றனர். திமுக ஆட்சிக்கு வந்தாலே இதுதான் பிரச்சனை, திரைத்துறை சுதந்திரமாக செயல்பட முடியாது. அதிமுக ஆட்சியின் போதே விஜய் படம் வெளியாக எவ்வித சிக்கலும் இல்லாமல் வெளியிட வழி வகுத்தது என தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

eps - mk stalin
DMK - Ajithkumar
Ajith Kumar TN Govt
elon musk vs Trump
Ajith Kumar Case - Siva Gangai