ஆணவக்கொலைகள் தடுக்க ஒரு துண்டு பிரசுரம் கூட தரவில்லை – உயர்நீதிமன்ற நீதிபதிகள் அதிருப்தி!

ஆணவக்கொலைகள் தடுக்க தமிழக அரசு இதுவரை ஒரு துண்டு பிரசுரம் கூட அடித்து மக்களுக்கு தராதது வேதனையாக இருப்பதாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
கடந்த 9 ம் தேதி உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து ஆணவக்கொலைகள் எதிராக வழக்குபதிவு செய்திருந்தது. நேற்று அந்த வழக்கின் விசாரணை நடந்து வந்த சூழலில் ஆஜரான நீதிபதி மணிகுமார் தமிழக அரசு இதுவரை ஒரு துண்டுப்பிரசுரம் கூட அடித்து ஆணவக்கொலைகளுக்கு எதிராக மக்களிடம் பேசாதது வேதனை அளிப்பதாக தெரிவித்து இருந்தனர். உடனே, ஆஜரான தமிழக அரசு வழக்கறிஞர் தமிழகத்தின் அனைத்து காவல் நிலையங்களிலும் ஆணவ கொலைகளை விசாரிக்க தனி பிரிவு இருப்பதாக தெரிவித்தார்.
இதை கேட்ட, நீதிபதிகள் இந்த வழக்கு மீதான விசாரணையை இன்று பிற்பகல் மீண்டும் விசாரிக்க உள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
புதுச்சேரியில் புதிதாக 3 நியமன எம்எல்ஏக்கள் அறிவிப்பு.!
July 11, 2025
பழனி செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு!! 31 நாள்களுக்கு ரோப் கார் இயங்காது – நிர்வாகம் அறிவிப்பு.!
July 11, 2025
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதங்கள்.., இந்தியாவை மிரட்டிய இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் அவுட்.!
July 11, 2025
”லோகேஷ் மீது கோவமாக உள்ளேன்” – நடிகர் சஞ்சய் தத்.!
July 11, 2025