ஊரடங்கு உத்தரவிற்கு அடங்கவில்லை ! 1,289 பேர் மீது வழக்கு

Default Image

கொரோனா வைரஸால் இந்தியாவில் 600க்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட்டுள்ளனர்.தமிழகத்தில் 30-க்கும் மேற்பட்டோர்பாதிக்கப்பட்டுள்ளனர். இதை கட்டுப்படுத்தும் விதமாக மத்திய மற்றும்  மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.இதன்  பகுதியாக தமிழகம் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் 144 ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஆனால் சிலர்  ஊரடங்கு உத்தரவினை  மீறி வாகனங்களில் சுற்றி திரிந்ததையும் அவர்களுக்கு காவல்துறையினர்  நூதன தண்டனைகளும் வழங்கி வருகின்றனர் .இந்நிலையில் திருச்சி மத்திய மண்டலத்தில், ஊரடங்கு உத்தரவை மீறியதாக 1289 பேர் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர்.பின்னர் அவர்கள் காவல்நிலைய ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். மேலும் 802 இருசக்கர வாகனங்கள் மற்றும்  22 நான்கு சக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டது . எனவே ஊரடங்கு உத்தரவை மீறி இருசக்கர வாகனங்களில் சுற்றுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்  என்று காவல்த்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்