ஒரு மணி நேரத்திற்குள் 2 முறை பேட்டியளித்த ரஜினிகாந்த்! பரபரக்கும் தமிழக அரசியல் களம்!

Published by
மணிகண்டன்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று கமல்ஹாசன் ஏற்பாடு செய்திருந்த மறைந்த இயக்குனர் சிகரம் கே.பாலசந்திரன் அவர்களின் உருவச்சிலை திறப்பு விழாவில் பங்கேற்ற நடிகர் ரஜினிகாந்த், விழா முடிந்ததும் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது ,’ திருவள்ளுவருக்கு காவி பூசுவது போல எனக்கும் சிலர் காவி வண்ணம் பூசப்பார்க்கிறார்கள். நானும் திருவள்ளுவரும் காவி சாயத்திற்குள் சிக்கமாட்டோம். திருவள்ளுவருக்கு காவி பூசுவது அவர்களது தனிப்பட்ட விருப்பம் . ‘ என தன் மீது கூறப்பட்டுவரும் அரசியல் சர்ச்சைகளுக்கு பதிலளித்தார்.
அவரது இந்த பேச்சு தமிழகம் மட்டுமல்லாதாலு இந்திய அளவில் கவனம் ஈர்த்தன. பல அரசியல் கட்சியினர் கருத்து தெரிவித்தனர். இவரது கருத்துக்களுக்கு ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பியது. அந்த அரசியல் தடாலடி பேச்சின் தாக்கம் அடங்குவதற்குள் அடுத்த பேட்டியை தனது வெற்றிக்கு சென்றவுடன் கொடுத்தார்.
அவர் வீட்டில் பத்திரிக்கையளர்களிடம் பேசுகையில், ‘என் மீது பாஜக சாயம் பூச ஊடகங்கள் முயற்சி செய்கின்றன. நான் வெளிப்படையாக தான் பேசிவருகின்றேன். அரசியல் கட்சி தொடங்கும் வரை நான் திரைப்படங்களில் நடிப்பேன். தமிழக அரசியலில் இன்னும் சரியான தலைமைக்கு வெற்றிடம் உள்ளது உண்மைதான். ‘ என தனது கருத்துக்களை மீண்டும் பதிவு செய்தார்.
தமிழக அரசியல் வெற்றிடம் பற்றி அவர் கூறிய கருத்து தமிழக ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி என இரு தரப்பினர் பற்றியும் எதிர்ப்பை சந்தித்தது. இவரது அடுத்தடுத்த அரசியல் பேச்சுக்கள் தான் இன்றைய அரசியல் களத்தில் தலைப்பு செய்தியாக மாறியுள்ளது குறிப்பிடதக்கது.

Recent Posts

கில் மாதிரி விளையாட ஆசைப்படுகிறேன்…சாதனை படைத்த வைபவ் சூர்யவம்சி பேச்சு!

கில் மாதிரி விளையாட ஆசைப்படுகிறேன்…சாதனை படைத்த வைபவ் சூர்யவம்சி பேச்சு!

லீட்ஸ்: இந்திய கிரிக்கெட்டின் உருவாகி வரும் நட்சத்திரமான வைபவ் சூர்யவம்சி, இங்கிலாந்து அண்டர்-19 அணிக்கு எதிரான இளையோர் ஒருநாள் போட்டியில்…

8 hours ago

மஸ்கின் கட்சியில் இந்த மூன்று அமெரிக்கர்கள் இணைவார்கள்! ட்ரம்ப் ஆதரவாளர் லாரா லூமர் கணிப்பு!

வாஷிங்டன்: டொனால்ட் டிரம்பின் நெருங்கிய ஆதரவாளரும், மாகா இயக்கத்தின் முக்கிய பிரமுகருமான லாரா லூமர், எலான் மஸ்க் தொடங்கவுள்ள புதிய…

8 hours ago

மடப்புரம் அஜித் சகோதரர் நவீன் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதி! என்ன காரணம்?

சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக…

10 hours ago

2 கோடி உறுப்பினர்களை சேர்க்க த.வெ.க மும்முரம்… ஆலோசனைக் கூட்டத்திற்கு அழைப்பு!

சென்னை: தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு 2 கோடி உறுப்பினர்களை சேர்க்கும் இலக்கை அடைய…

10 hours ago

சுப்மன் கில் பேட்டிங் பார்த்து சோர்ந்துட்டோம்! அரண்டு போன இங்கிலாந்து பயிற்சியாளர்!

பர்மிங்காம்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 2-6, 2025, எட்ஜ்பாஸ்டன்), இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்…

12 hours ago

தூத்துக்குடி விமானத்தில் இயந்திர கோளாறு! அவசரமாக ஓடுபாதையில் நிறுத்தம்!

தூத்துக்குடி : சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு ஜூலை 6, 2025 காலை 10:10 மணிக்கு புறப்பட இருந்த ஸ்பைஸ்ஜெட்…

13 hours ago