தமிழ்நாடு

#Breaking:நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு!

சென்னை:கொரோனா பரவல் காரணமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை தள்ளி வைக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.குறிப்பாக,கொரோனா பாதித்து தீவிர சிகிச்சை பிரிவில் இருப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதாக மருத்துவத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,கொரோனா பரவல் காரணமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை தள்ளி வைக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தற்போது,கொரோனா தொற்று உச்சத்தில் இருப்பதாலும்,தேர்தல் நடத்தினால் கொரோனா பாதிப்பு மிக மோசமான நிலையை எட்டும் […]

chennai high court 3 Min Read
Default Image

அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கருக்கு மீண்டும் கொரோனா தொற்று உறுதி …!

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கருக்கு மீண்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கடந்த சில தினங்களாக கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. பல அரசியல்வாதிகள் மற்றும் பிரபலங்களுக்கும் தொற்று பாதிப்பு தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ் எஸ் சிவசங்கருக்கு தற்போது மீண்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக கூறியுள்ள அமைச்சர், […]

Backward Classes Welfare Minister 3 Min Read
Default Image

“அமைச்சர் சொன்ன பகீர் தகவல்;டாஸ்மாக் கடைகளை உடனே மூடுக” – ஈபிஎஸ் வலியுறுத்தல்!

சென்னை:சந்தர்ப்பவாத அரசின் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் திரு. மா.சுப்பிரமணியன் அவர்கள்,ராக்கெட் வேகத்தில் கொரோனா தொற்று பரவுவதாக ஊடகப் பேட்டியில் தற்போது ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார் எனவும், இச்சூழலில் டாஸ்மாக் கடைகளை திறந்து வைத்திருப்பது என்ன நியாயம்?,உடனே அதை மூடுக எனவும் ஈபிஎஸ் வலியுறுத்தியுள்ளார். விடியா திமுக அரசு மக்களின் இன்னுயிரோடு விளையாடாமல்,தன்னுடைய இரட்டை வேட நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு,கொரோனா நோய்த் தொற்று கட்டுக்குள் வரும் வரை,தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகள் மற்றும் பார்களை உடனடியாக […]

#AIADMK 10 Min Read
Default Image

கடனை திருப்பி கொடுக்காததால் சென்னை தி.நகரிலுள்ள பிரைம் சரவணா ஸ்டோர்ஸ் ஜப்தி …!

இந்தியன் வங்கியில் வாங்கிய கடனை திருப்பி கொடுக்காததால் சென்னையிலுள்ள பிரைம் சரவணா ஸ்டோர்ஸ் மற்றும் சரவணா தங்கநகை மாளிகை கட்டிடம் ஜப்தி செய்யப்பட்டுள்ளது. சென்னை தி நகரில் உள்ள பிரைம் சரவணா ஸ்டோர்ஸ் மற்றும் உஸ்மான் சாலையில் அமைந்துள்ள சரவணா தங்க நகை மாளிகை ஆகிய இரண்டு கட்டிடங்களுக்கான இடத்திற்காக இந்தியன் வங்கியில் 150 கோடி ரூபாய் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. இந்த கடனுக்கான நிலுவை தொகையை இந்தியன் வங்கிக்கு சரவணா ஸ்டோர்ஸ் நிர்வாகிகள் கட்டாமல் இருந்துள்ளனர். […]

foreclosure 3 Min Read
Default Image

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் – தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை!

சென்னை:நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அரசியல் கட்சிகளுடன்  தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை. தமிழகத்தில் விரைவில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில்,அரசியல் கட்சிகள் அதற்கு  தயாராகி வருகின்றன.இந்நிலையில், தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன்  மாநில தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை நடத்தவுள்ளது. அதன்படி,அரும்பாக்கத்தில் உள்ள தேர்தல் ஆணைய அலுவலகத்தில் இன்று காலை 11.30 மணிக்கு அரசியல் கட்சிகளுடனான தேர்தல் ஆணையத்தின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. இந்த  கூட்டத்தில்,தமிழகத்தில் உள்ள 21 […]

#Election Commission 3 Min Read
Default Image

இன்று முதல் விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு செல்லும் சுற்றுலா படகு சேவை தொடக்கம்…!

இன்று முதல் குமரியிலுள்ள விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு சுற்றுலா படகு சேவை தொடங்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலை தடுக்கும் விதமாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் பொதுமக்கள் கடற்கரை மற்றும் சுற்றுலாத் தலங்களுக்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து  கடந்த 7ஆம் தேதி முதல் கன்னியாகுமரி கடற்கரை பகுதியில் உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு செல்வதற்கான சுற்றுலா பயணிகள் படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. இதனால் […]

Thiruvalluvar statue 3 Min Read
Default Image

#Breaking:நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் எப்போது? – வெளியான முக்கிய தகவல்!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் எப்போது நடத்தப்படும் என்பது தொடர்பான அறிவிப்பாணையை வருகின்ற 22 ஆம் தேதி வெளியிட மாநில தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில்,நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி குறித்த அறிவிப்பாணையை வருகின்ற ஜன.22 ஆம் தேதி வெளியிட மாநில தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உச்சநீதிமன்றத்தில் தேர்தல் தொடர்பான வழக்கு வருகின்ற ஜன.24 ஆம் தேதி வர இருப்பதால்,ஜன.22 ஆம் தேதியே […]

State Election Commission 2 Min Read
Default Image

இன்று அடிக்கல் நாட்டும் முதல்வர் ஸ்டாலின்!

சென்னை:மயிலாடுதுறை ஆட்சியர் அலுவலகத்துக்கு முதல்வர் ஸ்டாலின் அவர்கள் காணொலி மூலம் இன்று அடிக்கல் நாட்டுகிறார். மயிலாடுதுறை மாவட்டத்தில் புதிதாக கட்டப்படவுள்ள ஆட்சியர் அலுவலகத்துக்கு முதல்வர் ஸ்டாலின் அவர்கள் காணொலி மூலம் இன்று அடிக்கல் நாட்டுகிறார். இதனைத் தொடர்ந்து,பால்பண்ணை பகுதியில் தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான 21 ஏக்கரில் ரூ.114 கோடி மதிப்பில் மயிலாடுதுறை ஆட்சியர் அலுவலகம் கட்டப்படவுள்ளது.

CM MK Stalin 2 Min Read
Default Image

“அடிமாட்டு விலை…பலிக்காது;போராடுவதற்கு பாமக தயங்காது” – ராமதாஸ் கண்டனம்!

என்.எல்.சி மூன்றாவது சுரங்கத்திற்காக அடிமாட்டு விலைக்கு நிலங்களை பறிக்கும் முயற்சி பலிக்காது என்றும்,கையகப் படுத்தப்படும் நிலங்களுக்கு ஏக்கருக்கு ரூ.1 கோடி வழங்க வேண்டும் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். என்.எல்.சி.மூன்றாவது சுரங்கத்திற்காக 26 கிராமங்களில் கையகப்படுத்தப் படவுள்ள நிலங்கள் கருப்பு வைரம் எனப்படும் நிலக்கரி புதைந்து கிடக்கும் பூமியாகும் என்றும்,இந்த நிலங்கள் அடுத்த பல பத்தாண்டுகளுக்கு என்.எல்.சி நிறுவனத்திற்கு பல்லாயிரம் கோடிகளை கொட்டிக் கொடுக்கக் கூடியவை.அத்தகைய நிலங்களுக்கு ஏக்கருக்கு ரூ.23 லட்சம் மட்டுமே வழங்கப்படும் என்பது […]

#PMK 17 Min Read
Default Image

பெட்ரோல்,டீசல் விலை – இன்றைய நிலவரத்தில் மாற்றமா?..!

சென்னை:76-வது நாளாக மாற்றமின்றி இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.101.40-க்கும்,அதைப்போல்,ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.91.43-க்கும் விற்பனை செய்யப்படுகின்றது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல்,டீசல் விலைகளை,எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.இதனால்,பெட்ரோல்,டீசல் விலையில் அவ்வப்போது மாற்றங்கள் ஏற்படுவதுண்டு. இதற்கிடையில்,கடந்த ஆண்டு நவம்பர் 3 ஆம் தேதி,பெட்ரோல் மீதான கலால் வரியில் 5 ரூபாயையும், டீசல் மீதான கலால் வரியில் 10 ரூபாயையும் மத்திய அரசு குறைத்தது. இந்நிலையில்,சென்னையில் இன்று […]

chennai petrol price 3 Min Read
Default Image

முதலமைச்சர் அவர்களே! சபாஷ்! 7.5 கோடி தமிழர்கள் உங்கள் பின்னால்! – பீட்டர் அல்போன்ஸ்

தமிழக அலங்கார ஊர்தி சென்னையில் நடைபெறும் குடியரசு தின விழா கொண்டாட்ட ஊர்வலத்தில் இடம்பெறும் என்ற தமிழக முதல்வரின் அறிவிப்பிற்கு வரவேற்பு தெரிவித்து சிறுபான்மை நல ஆணையத்தின்  தலைவர் பீட்டர் அல்போன்ஸ் வரவேற்பு தெரிவித்து ட்வீட். டெல்லியில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில் கலந்து கொள்ள கோரிக்கை செய்து தமிழக அரசு சார்பில் வ.உ.சி, வேலுநாச்சியார், பாரதியார், கப்பலோட்டிய தமிழர் உள்ளிட்ட சுதந்திர போராட்ட வீரர்களின் உருவப்படங்கள் அடங்கிய ஊர்திகள் காண்பிக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழகத்தின் சார்பில் கொடுக்கப்பட்ட […]

#MKStalin 5 Min Read
Default Image

திமுக தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளராக டி.ஆர்.பி.ராஜா நியமனம்…!

தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளராக டி.ஆர்.பி.ராஜா நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் துரைமுருகன் அவர்கள் தெரிவித்துள்ளார்.  தி.மு.கழக தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளராக, பணியாற்றி வந்த தமிழக நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் ராஜன் இந்த பதவியில் விலக்கியதையடுத்து, தற்போது, தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளராக டி.ஆர்.பி.ராஜா நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் துரைமுருகன் அவர்கள் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், தி.மு.கழக தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளராக, பணியாற்றி வந்த தமிழக நிதித்துறை அமைச்சர் மாண்புமிகு. பி.டி.ஆர். பழனிவேல் […]

#DMK 4 Min Read
Default Image

#BREAKING : தமிழக அலங்கார ஊர்தி சென்னையில் நடைபெறும் குடியரசு தின விழா கொண்டாட்ட ஊர்வலத்தில் இடம்பெறும் – முதல்வர்

டெல்லி குடியரசு தின விழாவில் அனுமதி மறுக்கப்பட்ட தமிழக அலங்கார ஊர்தி சென்னையில் நடைபெறும் குடியரசு தின விழா கொண்டாட்ட ஊர்வலத்தில் இடம்பெறும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘குடியரசு தின அலங்கார அணிவகுப்பில் மாநிலங்கள் சார்பாகவும், மத்திய அரசின் துறைகள் சார்பாகவும் நடைபெறும் அலங்கார ஊர்தி அணிவகுப்பானது. இந்த ஆண்டு ‘இந்தியா 75’ என்ற தலைப்பின் கீழ் நடைபெற உள்ளது. இந்நிகழ்வில் இடம்பெற வேண்டி, விடுதலைப்போரில் தமிழகத்தின் பங்களிப்பைப் […]

#MKStalin 9 Min Read
Default Image

மக்களே எச்சரிக்கை..! தமிழகத்தில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று..!

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் முழுவதும், 23,888 பேருக்கு கொரோனா தொற்று செய்யப்பட்டுள்ள நிலையில், 29 பேர் உயிரிழப்பு.  தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும்  நிலையில், இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த  வகையில், தமிழகம் முழுவதும் புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் முழுவதும், 23,888 பேருக்கு கொரோனா தொற்று […]

#Death 3 Min Read
Default Image

தமிழக அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பாராட்டு! – திருமாவளவன்

சென்னை, தாம்பரம், ஆவடி ஆகிய மாநகராட்சிகளை தனித் தொகுதிகளாகவும், சென்னை உட்பட 11 மாநகராட்சிகளை பெண்களுக்கான தொகுதிகளாகவும் தமிழக அரசு அறிவித்துள்ளதற்கு விசிக சார்பில் தமிழக அரசிற்கு பாராட்டு. சென்னை, தாம்பரம், ஆவடி ஆகிய மாநகராட்சிகளை தனித் தொகுதிகளாகவும் சென்னை உட்பட 11 மாநகராட்சிகளை பெண்களுக்கான தொகுதிகளாகவும் தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு தமிழக அரசுக்கு விசிக தலைவர் திருமாவளவன் அவர்கள் பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,’சென்னை, தாம்பரம், ஆவடி ஆகிய மாநகராட்சிகளை தனித் […]

#Tamilnadugovt 4 Min Read
Default Image

ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு காருக்கு பதிலாக உழவுக்கருவிகள், நிலம் ஆகியவற்றை தரலாம் – இயக்குனர் தங்கர் பச்சான்!

ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு காருக்கு பதிலாக உழவுக்கருவிகள், நிலம் ஆகியவற்றை தரலாம் என இயக்குனர் தங்கர் பச்சான் கோரிக்கை வைத்துள்ளார். பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழகத்தில் நடத்தப்பட்டு வரும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் வெற்றி பெறும் வீரர்கள் மற்றும் காளை மாட்டின் உரிமையாளர்களுக்கு கார் மற்றும் இரு சக்கர வாகனங்கள் பரிசாக வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இது தொடர்பாக பேசிய இயக்குனர் தங்கர் பச்சான் அவர்கள் காரின் தொகைக்கு ஈடாக உழவுக் கழிவுகள், மாடு அல்லது நிலம் போன்றவற்றை தந்து […]

jallikattu 2 Min Read
Default Image

கொரோனா எதிரொலி : பழனி முருகன் கோயிலில் பக்தர்களின்றி எளிமையாக நடைபெறும் தைப்பூச திருவிழா..!

கொரோனா எதிரொலி காரணமாக பழனி முருகன் கோயிலில் பக்தர்களின்றி எளிமையாக நடைபெறும் தைப்பூச திருவிழா. தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், தைப்பூசத்தை ஒட்டி பழனி முருகன் கோயிலில் பக்தர்களின்றி தேரோட்டம் நடைபெற்று வருகிறது. பெரியநாயகி அம்மன் கோயில் வளாகத்தில் சிறிய […]

#Corona 2 Min Read
Default Image

தொடரும் விசாரணை மரணங்கள்…! வரம்பு மீறுகிறதா காவல்துறை? – மக்கள் நீதி‌ மய்யம்

தமிழகத்தில் மனித உரிமைகளும், சட்ட நடைமுறைகளும் மதிக்கப்படுகின்றனவா எனும் வலுவான சந்தேகத்தை எழுப்புகிறது சேலத்தில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த மாற்றுத் திறனாளியான பிரபாகரன் திருட்டு வழக்கில் சேந்தமங்கலம் போலீசாரால் கைதுசெய்யப்பட்டார். மறுநாளே உடல்நிலை சரியில்லையென மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர் மரணமடைந்தார். அவர் காவல்துறையின் துன்புறுத்தலால்தான் மரணமடைந்தார் எனும் சந்தேகம் வலுத்து அவரது உறவினர்களும், அரசியல் கட்சிகளும் போராட்டம் நடத்திய பின்னரே சேந்தமங்கலம் காவல்துறையினர் மூவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து மக்கள் நீதி மய்யத்தின் மாநில செயலாளர் இளங்கோ  […]

#MKStalin 4 Min Read
Default Image

திராவிட கழக தலைவர் கி.வீரமணிக்கு கொரோனா தொற்று உறுதி..!

திராவிட கழக தலைவர் கி.வீரமணி அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த கொரோனா வைரஸால் அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், திராவிட கழக தலைவர் கி.வீரமணி அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து கிண்டி கிங் இன்ஸ்டிடியூட்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

#Corona 2 Min Read
Default Image

அதிகாரப்பலம் கொண்டு ஊடகங்களை அச்சுறுத்தி, அடக்கியாள முற்படுவதா? – சீமான்

அதிகாரப்பலம் கொண்டு ஊடகங்களை அச்சுறுத்தி, அடக்கியாள முற்படுவதா? என சீமான் அறிக்கை.  பிரபல தனியார் தொலைக்காட்சியில் இரண்டு சிறுவர்கள் மன்னர், அமைச்சர் வேடமிட்டு நடித்த காட்சி தற்போது சர்ச்சையை எழுப்பியுள்ள நிலையில், இதுகுறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் சிறுவர்கள் இருவர் மோசமான ஆட்சியாளர் குறித்து மன்னர், அமைச்சர் வேடமிட்டு, பகடி செய்ததற்காக அத்தொலைக்காட்சிக்கு அச்சுறுத்தலும், மிரட்டலும் விடுக்கும் பாஜகவின் போக்கு கடும் கண்டனத்திற்குரியது. […]

#Seeman 3 Min Read
Default Image