சென்னை:77-வது நாளாக மாற்றமின்றி இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.101.40-க்கும்,அதைப்போல்,ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.91.43-க்கும் விற்பனை செய்யப்படுகின்றது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல்,டீசல் விலைகளை,எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.இதனால்,பெட்ரோல்,டீசல் விலையில் அவ்வப்போது மாற்றங்கள் ஏற்படுவதுண்டு. இதற்கிடையில்,கடந்த ஆண்டு நவம்பர் 3 ஆம் தேதி,பெட்ரோல் மீதான கலால் வரியில் 5 ரூபாயையும், டீசல் மீதான கலால் வரியில் 10 ரூபாயையும் மத்திய அரசு குறைத்தது.எனினும்,சர்வதேச சந்தையில் கச்சா […]
தமிழகம் முழுவதும் இன்று பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவதற்கான சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது.எனினும்,கொரோனா தொற்று பரவலை தடுக்க அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.அந்த வகையில்,கொரோனா தடுப்பூசி போடும் பணிகளை தமிழக அரசு மும்முரமாக நடத்தி வருகின்றது.அதன்படி, ஏற்கனவே இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு பூஸ்டர் டோஸ் போடும் பணி கடந்த 10 ஆம் தேதி தொடங்கப்பட்டது. இதனையடுத்து,முதல் கட்டமாக மருத்துவ பணியாளர்கள்,முன் களப்பணியாளர்கள்,60 வயதுக்கு […]
சென்னையில் பெரும்பாலான இடங்களில் ஏர்டெல் நிறுவனத்தின் இணைய சேவை, அலைபேசி சேவை இரண்டு முற்றிலும் முடங்கியதால் அவதிக்குள்ளான மக்கள். சென்னையில் பெரும்பாலான இடங்களில் ஏர்டெல் நிறுவனத்தின் இணைய சேவை, அலைபேசி சேவை இரண்டு முற்றிலும் முடங்கியுள்ளது. தகவல் தொடர்பு முற்றிலும் பாதிக்கப்பட்டதால் ஏர்டெல் வாடிக்கையாளர்கள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர். இதுகுறித்து அவர் கூறுகையில், எங்களுக்கு ஒரு சிறிய தொழில்நுட்ப சிக்கல் இருந்தது என்றும், அது தற்போது சரி செய்யப்பட்டு விட்டது என்றும் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில், 26,981 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 35 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றது. அந்த வகையில், ஏற்கனவே இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு பூஸ்டர் டோஸ் போடும் பணி கடந்த 10ஆம் தேதி தொடங்கப்பட்டது. தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில், 26,981 பேருக்கு கொரோனா தொற்று […]
முதுநிலை மருத்துவ படிப்புக்கான தரவரிசை பட்டியலை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் வெளியிட்டார். முதுநிலை மருத்துவப் படிப்பில் 1,163 இடங்களுக்கான கலந்தாய்வு நாளை முதல் தொடங்குகிறது இந்நிலையில், அதற்கான தரவரிசைப் பட்டியலை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் வெளியிட்டார். அதன்பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், 28, 29ம் தேதிகளில் தமிழ்நாடு அரசு சார்பில் 7.5% இட ஒதுக்கீட்டில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 436 இடங்களுக்கான நேரடி கலந்தாய்வு நடைபெறுகிறது. மற்ற மாணவர்களுக்கு […]
நாளை தமிழகம் முழுவதும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவதற்கான சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றது. அந்த வகையில், ஏற்கனவே இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு பூஸ்டர் டோஸ் போடும் பணி கடந்த 10ஆம் தேதி தொடங்கப்பட்டது. முதல் கட்டமாக மருத்துவ பணியாளர்கள், முன் களப்பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்ட இணை உள்ளவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடப்படுகிறது. […]
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதியை அடுத்த வில்வ மரத்துபட்டியை சேர்ந்த ராஜப்பா என்பவர் உயிரிழந்த நிலையில், அவருக்கு இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தியதாக குறுஞ்செய்தி வந்ததால் குடும்பத்தினர் அதிர்ச்சி. தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தற்போது தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதியை […]
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் மாநில தேர்தல் ஆணையர் ஆலோசனை. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்து அரசியல் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியதை தொடர்ந்து, தற்போது அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் மாநில தேர்தல் ஆணையர் பழனிக்குமார் காணொலி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர்கள், எஸ்.பி-க்கள் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
கொரோனா தொற்று பரவல் காரணமாக ஜன.29ம் தேதி நடைபெற இருந்த தேசிய திறனாய்வு தேர்வு (NTSE) பிப்.5ம் தேதிக்கு தள்ளி வைக்கப்படுவதாக அரசு தேர்வுகள் துறை அறிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி ஹமிழகம் முழுவதும், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், ஜன.29ம் தேதி நடைபெற இருந்த தேசிய திறனாய்வு […]
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீ வெங்கடபிரியாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தமிழகம் முழுவதும் புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீ வெங்கடபிரியாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. லேசான அறிகுறிகளுடன் கொரோனா தொற்று உறுதியானதையடுத்து, வெங்கடபிரியா தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
ஆவின் நிறுவனத்தின் தயாரிப்பான ஐந்து புதிய பொருட்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்கள் அறிமுகம் செய்து வைத்துள்ளார். தமிழக முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று தலைமைச் செயலகத்தில், ஆவின் நிறுவனத்தால் புதியதாக தயாரிக்கப்பட்ட பிரீமியம் மில்க் கேக், யோகர்ட் பானம் (மாம்பழம் மற்றும் ஸ்ட்ராபெரி சுவையில்), பாயாசம் மிக்ஸ், பால் புரத நூடுல்ஸ் மற்றும் டெய்ரி ஒய்ட்னர் ஆகிய ஐந்து புதிய பொருட்களை விற்பனைக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார். இந்த நிகழ்வில் அமைச்சர்கள் […]
எவிடென்ஸ் கதிர் (எ) ஆரோக்கியசாமி வின்சென்ட் ராஜ் அவர்களுக்கு ஐரோப்பிய கவுன்சிலின் ரவுல் வாலன்பெர்க் விருது அறிவிக்கப்பட்டதற்கு தமிழக முதல்வர் மு. அவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஐரோப்பியக் கவுன்சில் சார்பாக மனிதாபிமானம் மற்றும் மனித உரிமைகளுக்காக , சிறந்த பணிக்காகவும் தாழ்த்தப்பட்ட தலித் மக்களுக்கான பாதுகாவலராக திகழ்ந்ததற்காகவும் மதுரை எவிடன்ஸ் கதிருக்கு ‘ரவுல் வாலன்பெர்க்’ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. எவிடென்ஸ்’கதிர் (எ) ஆரோக்கியசாமி வின்சென்ட் ராஜ் அவர்களுக்கு ஐரோப்பிய கவுன்சிலின் ரவுல் வாலன்பெர்க் விருது அறிவிக்கப்பட்டதற்கு மாண்புமிகு தமிழ்நாடு […]
உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி சி.டி.செல்வம் தலைமையில் புதிய காவல் ஆணையம் அமைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உத்தரவு. காவலர் – பொதுமக்களுக்கிடையேயான உறவை மேம்படுத்தவும், காவல்துறை பணியாளர்களுக்கு நலத்திட்டங்களைச் செயல்படுத்திடவும், புதிய பயிற்சி முறைகளைப் பரிந்துரைத்திடவும் சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதியரசர் திரு. சி.டி. செல்வம் அவர்கள் தலைமையில் புதிய காவல் ஆணையம் அமைத்திட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி, இந்த புதிய காவல் ஆணையத்தில், சென்னை உயர்நீதிமன்ற […]
சென்னை:நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையம் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில், திமுக,அதிமுக உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் வலியுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் விரைவில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில்,அரசியல் கட்சிகள் அதற்கு தயாராகி வருகின்றன.இதற்கிடையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி குறித்த அறிவிப்பாணையை வருகின்ற ஜன.22 ஆம் தேதி வெளியிட மாநில தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது. மேலும்,கொரோனா 3-வது அலை உச்சத்தில் உள்ள […]
தாம்பரம் அருகே கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த போது விஷவாயு தாக்கி இருவர் உயிரிழந்துள்ளனர். சென்னை தாம்பரம் அருகே உள்ள வரதராஜபுரம் எனும் பகுதியில் உள்ள ஜெயக்குமார் என்பவர் வீட்டில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்வதற்காக பணியாளர்கள் சென்றுள்ளனர். கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய சென்ற ஊழியர்கள் ஏழுமலை, ராஜேஷ் ஆகியோர் விஷவாயு தாக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இவர்கள் இருவரது உடலையும் கைப்பற்றி மணிமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பதவி உயர்வுக்கான உத்தரவை பின்பற்றாததற்கு தமிழக அதிகாரிகள் மன்னிப்பு கேட்டதால் அவமதிப்பு வழக்கை உச்சநீதிமன்றம் முடித்து வைத்துள்ளது. தமிழக அரசு கடந்த 2014 ஆம் ஆண்டு பணி மூப்பு, பதவி உயர்வுக்கான இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சட்ட விதிகள் சில திருத்தங்களைக் கொண்டு வந்தது. இந்நிலையில் இந்த சட்ட விதிகளை எதிர்த்து அரசின் பல்வேறு துறைகளை சார்ந்த அதிகாரிகள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இதனை விசாரித்த உயர் நீதிமன்றம் அரசு […]
தமிழகத்தில் கடந்த 2 வாரத்தில் ஐசியூவில் இருப்போர் எண்ணிக்கை இரு மடங்கு அதிகரித்து காணப்படுகிறது. நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில்,தமிழகத்திலும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. அந்தவகையில்,தமிழகம் முழுவதும், 23,888 பேருக்கு கொரோனா தொற்று செய்யப்பட்டுள்ள நிலையில்,29 பேர் உயிரிழந்ததாக நேற்று தமிழக மருத்துவத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.மேலும் 15,036 பேர் கொரோனாவிலிருந்து நலம் பெற்றுள்ள நிலையில், 1,61,171 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும்,சென்னையில் ஒரே நாளில் […]
சென்னை:நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அரசியல் கட்சிகளுடனான மாநில தேர்தல் ஆணையத்தின் ஆலோசனைக் கூட்டம் தற்போது தொடங்கியுள்ளது. தமிழகத்தில் விரைவில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில்,அரசியல் கட்சிகள் அதற்கு தயாராகி வருகின்றன.இதற்கிடையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி குறித்த அறிவிப்பாணையை வருகின்ற ஜன.22 ஆம் தேதி வெளியிட மாநில தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியனது. மேலும்,கொரோனா 3-வது அலை உச்சத்தில் உள்ள நிலையில் நகர்புற உள்ளாட்சி தேர்தலை நடத்தக்கூடாது என சென்னை உயர் நீதிமன்றத்தில் […]
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, தென்காசி, தேனி, விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 9 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே அடுத்த மூன்று மணி நேரத்துக்கு ஒரு சில மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவப் பல்கலைக்கழகத்திற்கு புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் பெயர் அதிமுக ஆட்சியிலேயே,புரட்சித்தலைவர் அவர்கள் உயிரோடு இருக்கும்போதே சூட்டப்பட்டு,சட்ட அங்கீகாரம் வழங்கப்பட்ட நிலையில்,மறைந்த திமுக தலைவர் தான் பெயர் சூட்டினார் என்றவாதம் வடிகட்டின பொய்,அண்டப்புளுகு ஆகாசப்புளுகு என்று ஓபிஎஸ் குற்றச்சாட்டு. சென்னை கிண்டியிலுள்ள மருத்துவப் பல்கலைக்கழகத்திற்கு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப்பல்கலைக்கழகம் என்று மறைந்த தி.மு.க. தலைவர் பெயர் சூட்டியதாகவும் கூறப்பட்டுள்ளது.இவை அனைத்தும் உண்மைக்குப் புறம்பான,வரலாற்றை திரித்து எழுதும் செயலாகும் எனவும்,இன்றளவிலும் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றுள்ள தலைவரை சிறுமைபடுத்துவது […]