பீகார் : தீபாவளி, சாத் பண்டிகையின் போது பயணிகளின் நெரிசலைக் குறைக்க, கோவை – பீகார் மாநிலம் பாராவுனி இடையே இரு மார்க்கமாகவும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. கோவையில் இருந்து வரும் 26ம் தேதி, நவம்பர் 2, 9 மற்றும் 16ம் தேதிகளில் பகல் 11.50 மணிக்கு புறப்படுகிறது. மறுமார்க்கமாக பாராவுனியில் இருந்து வரும் 29ம் தேதி, நவம்பர் 5, 12 மற்றும் 19ம் தேதிகளில் இரவு 11.45 மணிக்கு புறப்படுகிறது. ரயில் […]
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு வரும் அக்டோபர் மாதம் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியை அடுத்த வி.சாலையில் பிரமாண்டமாக நடைபெறவுள்ளது. மாநாடு நடைபெறும் நாள் நெருங்கியுள்ள காரணத்தால் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஒட்டு மொத்த தமிழகத்தினுடைய பார்வையும் மாநாடு மேல் தான் இருக்கிறது. மாநாட்டில் விஜய் என்ன பேசப்போகிறார்? கட்சியின் கொள்கை என்ன என்பதைத் தெரிந்துகொள்ள ஆவலுடன் காத்துள்ளனர். இந்நிலையில், விஜய் மாநாட்டில் என்னென்ன விஷயங்களைப் பற்றிப் பேசப்போகிறார் எவ்வளவு […]
சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் மாநில மாநாடு வரும் அக்டோபர் மாதம் 27ஆம் தேதி நடைபெற உள்ளது. மாநாடு நடைபெறும் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெறுகிறது. அங்கு மட்டுமல்லாமல் மாநிலத்தில் பல்வேறு இடங்களில் மாநாட்டுக்கான கட் அவுட்கள், பேனர்கள், அழைப்புகள் என தவெக தொண்டர்கள் தீவிரமாக வேலை செய்து வருகின்றனர். நேற்று, மாநாடு நடைபெறும் இடத்தில் பிரமாண்ட கட் அவுட்கள் அமைக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகின. அதில், முதலில் கர்மவீரர் […]
விக்கிரவாண்டி : சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் விஜய் தமிழக வெற்றிக் கழகம் கட்சியைத் தொடங்கி அரசியலில் களமிறங்கியுள்ளார். வருகின்ற 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் போயிடயிருக்கும் அவர் மும்மரமாக அரசியல் வேலைப்பாடுகளும் ஈடுபட்டு அடுத்தடுத்த நகர்வுகளை எடுத்துக்கொண்டு இருக்கிறார். இந்த சூழலில், கட்சியின் முக்கிய நிகழ்வான முதல் மாநாடு வரும் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியை அடுத்த வி.சாலையில் பிரமாண்டமாக நடைபெறவுள்ளது. எனவே, மாநாட்டுப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஒட்டுமொத்த தமிழகத்தினுடைய […]
சென்னை : அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் தொடர்பான இடங்களில் இன்றும் சோதனை தொடர்கிறது. அதன்படி, சென்னை அசோக்நகரில் உள்ள வைத்திலிங்கம் குடும்பத்துக்கு சொந்தமான 6 இடங்களில் 2-வது நாளாக அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகின்றனர். வைத்திலிங்கம் கடந்த ஆட்சியில் அமைச்சராக இருந்த போது, கட்டுமான நிறுவனத்திடம் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட ரூ.27 கோடியை லஞ்சம் பெற்றதாக அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் உட்பட 11 பேர் மீது, லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்திருந்தது. அதன் […]
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டையில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகம் இந்த அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலகம் உள்ளிட்ட அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இங்கு பணிபுரியும் அரசு அலுவலர்களுக்கு சிலர் அன்பளிப்பு வழங்குவதற்காக பணம் கொண்டு வந்துள்ளதாக தூத்துக்குடி லஞ்ச ஒழிப்பு காவல் துறைக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து, லஞ்ச ஒழிப்பு காவல்துறை டிஎஸ்பி பீட்டர் பால் தலைமையிலான காவல்துறையினர் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் திடீர் சோதனை […]
சென்னை : யூட்யூபர் இர்பான் சமீபத்தில், அவரது மனைவியின் பிரசவத்தின் போது பிறந்த குழந்தையின் தொப்புள் கொடியை கதிரிகோலால் வெட்டிய வீடியோவை அவரது சேனலில் பகிர்ந்திருந்தார். இந்த வீடியோவால் மிகப்பெரிய சர்ச்சை ஏற்பட்ட நிலையில் தற்போது சம்பத்தப்பட்ட ரெயின்போ மருத்துவமனைக்கு 10 நாட்கள் தடை விதித்தும், ரூ.50,000 அபராதமும் விதித்து டிஎம்எஸ் (DMS) நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும், ஏற்கனவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் கர்ப்பிணி பெண்களுக்கு மட்டும் சிகிச்சை செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேற்படி, அங்கு சிகிச்சைக்கு வரும் […]
சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே, (செப்டம்பர் 25.10.2024) வெள்ளிக்கிழமை பல மாவட்டங்களில் மின்தடை ஏற்படும் எனத் தமிழக மின்சார வாரியம் அறிவித்துள்ளது. அது என்னென்ன, பகுதி என்பதைக் கீழே பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள்… கோவை தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி சாலை (கண்ணன் துறை முதல் ராமநாதபுரம் சிக்னல் […]
தூத்துக்குடி : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. எனவே, இதன் காரணமாக மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதில் குறிப்பாக, தூத்துக்குடி மாவட்டத்தில் மும்மரமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஏனென்றால், இதே சமயம் கடந்த ஆண்டு தூத்துக்குடி, மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. எனவே, தூத்துக்குடி மாவட்டத்தில் தற்போது வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வதற்குத் தேவையான அணைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. இதனை, தூத்துக்குடி எம்பி […]
விக்கிரவாண்டி : தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு வரும் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியை அடுத்த வி.சாலையில் பிரமாண்டமாக நடைபெறவுள்ளது. எனவே, மாநாட்டுப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனையடுத்து, மாநாடு நடைபெறுவதற்கு முன்பு முதல் அறிவிப்பாக விஜய் அன்பு கட்டளை ஒன்றை தொண்டர்களுக்கு போட்டு இருந்தார். கர்ப்பிணிப் பெண்கள், பள்ளிச் சிறுவர் சிறுமியர், நீண்ட காலமாக உடல்நலமின்றி இருப்பவர்கள் நலனே எனக்கு மிக மிக முக்கியம். மாநாட்டிற்காக அவர்கள் மேற்கொள்ளும் நீண்ட தூரப் […]
சேலம் : திமுக கூட்டணி உடைந்து விடும், திமுக செல்வாக்கு சரிந்துள்ளது என்று எடப்பாடி பழனிச்சாமி பகல் கனவு காண்கிறார் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னர் விமர்சனம் செய்திருந்தார். இந்த விமர்சனத்திற்கு பதில் அளிக்கும் விதமாக இன்று சேலத்தில் நடைபெற்ற காட்சிக்கூட்டத்தில் அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேசினார். அவர் கூறுகையில், ” ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து மாநிலத்தின் முதலமைச்சராக முடியும் என்றால் அது அதிமுகவில் மட்டுமே சாத்தியம். அதற்கு உதாரணம் நான். அதேபோல திமுகவில் […]
சென்னை : தீபாவளி பண்டிகையையொட்டி நவம்பர் 3,4 இல் தாம்பரம் நெல்லை இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. அதன்படி, நெல்லை – தாம்பரம் இடையே நவ.3 ஆம் தேதியும், தாம்பரம்- நெல்லை இடையே நவ.4 ஆம் தேதியும் சிறப்பு ரயில் இயக்கவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மேலும், தீபாவளி முடிந்து சென்னை திரும்புபவர்களுக்காக நவம்பர் 3ஆம் தேதி மாலை 4 மணிக்கு நெல்லை – தாம்பரம் இடையேவும், மறு மார்க்கத்தில் நவம்பர் 4ஆம் தேதி பிற்பகல் 2.30 […]
தூத்துக்குடி : மஞ்சள் மூட்டைகள் பீடி இலைகள், அழகு சாதன பொருட்கள் உள்ளிட்டவை தூத்துக்குடி முள்ளக்காடு கோவளம் கடற்கரையில் இருந்து இலங்கைக்கு சிலர் கடத்த உள்ளதாக க்யூப் பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனை அடுத்து க்யூ பிரிவு காவல்துறையினர் உடனடி நடவடிக்கை மேற்கொண்டனர். இன்று அதிகாலை 2 மணியளவில் க்யூ பிரிவு போலீசார் தூத்துக்குடி கோவளம் கடற்பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கிருந்து படகு மூலம் இலங்கைக்கு கொண்டு செல்வதற்காக வந்த சரக்கு வாகனத்தை மடக்கி […]
சென்னை : இன்று கும்மிடிப்பூண்டி தொகுதி திமுக எம்எல்ஏ கீ.வேணுவின் இல்ல திருமணவிழா நடைபெற்றது. இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். அப்போது அவர் பேசுகையில், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி திமுக பற்றியும் , திமுக கூட்டணி பற்றியும் கூறிய பல்வேறு விமர்சனங்களுக்கு பதில் அளிக்கும் விதமாக பேசினார். அவர் கூறுகையில், ” மக்களால் போற்றப்படும் ஆட்சியாக திமுக உள்ளது. மக்களால் ஓரங்கட்டப்பட்ட கட்சியாக அதிமுக உள்ளது. திமுகவின் செல்வாக்கு வளர்ந்து […]
சென்னை : தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உறந்தைராயன் குடிக்காடு பகுதியில் உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கத்தின் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறையினார் இன்று சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இச்சோதனை சென்னையிலும் தொடர்ந்து வருகிறது. கடந்த 2011 அதிமுக ஆட்சி காலத்தில் அமைச்சராக இருந்த போது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவர் மீது லஞ்சஒழிப்புத்துறை, ஊழல் தடுப்பு பிரிவினர் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் வைத்தியலிங்கத்தின் மூத்த மகன் V.பிரபு மீதும் […]
கோவை : அந்தமானில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்றைய தினம் புயலாக வலுப்பெற்று நாளை கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், தமிழக்தில் பல்வேறு மாவட்டங்ளில் கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில், தமிழ்நாட்டில் அதிகபட்சமாக கோவையில் கடந்த 21 மணிநேரத்தில் 9 செ.மீ. மழை கொட்டித் தீர்த்துள்ளது. தொடர் மழைக் காரணமாக, கோவை மாநகரின் பல்வேறு சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஏற்கனவே, கனமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள […]
கோவை : அந்தமானில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்றைய தினம் புயலாக வலுப்பெற்று நாளை கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், கனமழை காரணமாக, கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உள்ள பள்ளி- கல்லூரிகளுக்கு (23-10-2024) இன்று ஒருநாள் மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல் கோவை, திருப்பூரில் இடைவிடாமல் மழை பெய்து வருகிறது. இந்த மழை இன்னும் […]
சென்னை : பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பாக சென்னையில் பயணிக்க, பெண் ஓட்டுநர்கள் மூலம் 250 ‘பிங்க் ஆட்டோ’ சென்னை மாநகரில் இயக்கப்பட உள்ளன. இந்த திட்டத்திற்கு தகுதியான 250 பெண்களுக்கு மானியமாக ரூ.1 லட்சம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும், இதற்கு தகுதியான பெண்கள் வரும் நவம்பர்-23ம் தேதிக்குள் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்த பிங்க் ஆட்டோக்களில் அவசர காலங்களில் புகார்களை விரைவாக தெரியப்படுத்த காவல் உதவி […]
நாமக்கல் : அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவானது இன்று நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற முதல்வர் மு.க. ஸ்டாலின் பல நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதன்பிறகு மேடையில், தமிழகத்தின் வளர்ச்சிக்கு அடித்தளமாக இருப்பது நாமக்கல் மாவட்டம் தான் எனவும் நாமக்கல் மாவட்டத்தில் கலைஞர் கருணாநிதியின் சிலை அமைவது மிகவும் பொருத்தமானது எனவும் உறையற்றினார். தமிழ்நாட்டில் திமுகவின் மதிப்பு சரிந்து விட்டதாக முன்னதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருந்தார். அதற்கு பதிலளித்தும் முதலவர் ஸ்டாலின் […]
நாமக்கல் : மாவட்டத்தில் பல்வேறு புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டித் தொடங்கி வைப்பதற்காகச் சென்னையிலிருந்து இன்று காலை விமானம் மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சேலம் மாவட்டத்துக்கு வருகை தந்திருந்தார். அதன்பிறகு காரின் மூலம் நாமக்கல் சென்ற அவர் மதியம் 12.30 மணியளவில் பரமத்தி சாலையில் உள்ள செலம்பக்கவுண்டா் பூங்காவில் திமுக முன்னாள் தலைவர் மு.கருணாநிதியின் உருவச் சிலையைத் திறந்து வைத்தார். அதனைத்தொடர்ந்து, 5 மணி அளவில் நாமக்கல்லில் ரூ. 810.28 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு […]