தென்காசி : வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் விளைவாக தென்காசி, செங்கோட்டை, மற்றும் மேற்கு தொடர்ச்சி மழை அடிவாரங்களில் உள்ள பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக குற்றாலத்திலும் கனமழை பெய்து வருவதால் அங்கு நீர்வரத்து அதிகரித்து திடீரென வெள்ளம் பெருக்கெடுத்து ஓடத்தொடங்கியது. அதைத் தொடர்ந்து, குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி என எல்லா அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு […]
சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே, (செப்டம்பர் 24.10.2024) வியாழன் கிழமை பல மாவட்டங்களில் மின்தடை ஏற்படும் எனத் தமிழக மின்சார வாரியம் அறிவித்துள்ளது. அது என்னென்ன, பகுதி என்பதைக் கீழே பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள்… கோவை கலங்கல், பீடம்பள்ளி, பட்டணம், பாப்பம்பட்டி, அக்கநாயக்கன்பாளையம், பட்டணம்புதூர், பாப்பம்பட்டிப்பிரிவு, கண்ணம்பாளையம், நடுப்பாளையம் (ஒரு மண்டலம்), சின்ன குயிலி, நாய்கன்பாளையம், பள்ளபாளையம் அரிசிபாளையம், எம்.எம்.பட்டி, செட்டிபாளையம் கடலூர் […]
சேலம் : கூட்டணியில் உள்ள கட்சிகளோடு திமுகவுக்கு புகைச்சல் ஏற்பட்டுள்ளது என்றும், 2026இல் கூட்டணி மாறலாம் என்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சேலத்தில் செய்தியாளர் சந்திப்பில் பல்வேறு தகவல்களை தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், ” திமுக கூட்டணி வலுவாக தான் இருக்கிறது என அவர்கள் கூறுகிறார்கள். ஏற்கனவே கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் புகைய ஆரம்பித்து விட்டது (சாம்சங் ஊழியர்கள் விவகாரத்தை மறைமுகமாக குறிப்பிட்டு). அடுத்து காங்கிரஸ் சார்பில் திமுகவின் நடவடிக்கை தொடர்ந்தால் நாங்களும் பேச வேண்டியிருக்கும் […]
சென்னை : வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதனால், தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில், தமிழ்நாட்டில் 9 துறைமுகங்களில் எச்சரிக்கை கூண்டு ஏற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுவை, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி ஆகிய துறைமுகங்களில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்படவுள்ளது. காற்றழுத்த […]
சென்னை : சமீபத்தில் பிரபல யூ-டியூபர் இர்பான் தனது யூ-டியூப் பக்கத்தில் தனது குழந்தை பிறக்கும் சமயத்தில் எடுக்கப்பட் வீடியோ பதிவை வெளியிட்டார். அதில், தனது குழந்தையின் தொப்புள் கொடியை இர்பான் மருத்துவர்கள் முன்னிலையில் கத்தரிகோலால் வெட்டுவது வீடியோவில் பதிவாகியுள்ளது. மருத்துவர்கள் இருக்கும் போதே, அவர்களின் முன் குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டிய இர்பானுக்கு மருத்துவர் சங்கங்கள் சார்பில் கண்டனங்கள் வலுக்கின்றன. இதுகுறித்து விளக்கம் கேட்டு இர்பான் மற்றும் சம்பந்தப்பட்ட மருத்துவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேலும், இது […]
சென்னை : மாமல்லபுரத்தில் “நோ பார்க்கிங்” போட்டிருக்கும் இடத்தில் காரை நிறுத்தக்கூடாது எனக் காவலாளர் ஒருவர் கூறியதற்கு, அந்த பகுதியில் காரில் வந்த 2 பெண்கள் மற்றும் 2 ஆண்கள் உட்பட 4 பேரும் சேர்ந்து காவலரைக் கடுமையாகத் தாக்கினார்கள். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த மோசமான சம்பவத்தில் ஈடுபட்ட அந்த 4 பேரையும் உடனடியாக கைது செய்யவேண்டும் என சமூக வலைத்தளங்களில் கண்டனங்கள் எழுந்தது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோக்கள் வெளியான […]
சென்னை : இந்தியன் ரயில்வேயில் ஏசி பெட்டிகளில் பயணிப்பவர்களுக்கு கம்பளி போர்வை கொடுக்கப்பட்டு வருகிறது. மேலும் உறையுடன் தலையணை , விரிப்பு ஆகியவை வழங்கப்படும். அப்படி வழங்கப்படும் போர்வை மற்ற துணி உபகாரணங்களை முறையாக ரயில்வே நிர்வாகம் சுத்தம் செய்து தர வேண்டும். அதற்கும் சேர்த்து தான் டிக்கெட் கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. அப்படி, வசூல் செய்யப்படும் தொகை முறையாக செலவு செய்யப்படுகிறதா.? முறையாக தலையணை உறை, காட்டன் போர்வைகள், கம்பளி போர்வைகள் முறையாக சுத்தம் செய்யப்படுகிறதா […]
சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் மாநாடு வரும் அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடைபெறுகிறது. தவெக புதுச்சேரி கட்சி நிர்வாகி சரவணன் இந்த மாநாட்டுக்கான பணிகளை நேற்று பார்வையிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். ஆனால், செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மாநாடு பணிகளில் தீவிரமாக ஈடுப்பட்டு வந்த சரவணன் மறைவு செய்தி கட்சியினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. […]
கோவை : கடந்த 2022ஆம் ஆண்டு அக்டோபர் 23ஆம் தேதி அதிகாலையில் கோவை உக்கடம் பகுதியில் உள்ள கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே கார் ஒன்று வெடித்து சிதறியது. இந்த காரில் இருந்த ஜமேஷா முபீன் என்பவர் உயிரிழந்தார். இச்சம்பவத்தில் பயங்கரவாதிகள் சதி இருக்கலாம் என்ற கோணத்தில் தேசிய புலனாய்வு அமைப்பினர் (NIA) விசாரணையை தீவிரப்படுத்தினர். அவர்கள் எதிர்நோக்கியது போலவே, கோவை கார் வெடிப்பு சம்பவத்திற்கு பின்னால், பயங்கரவாதிகள் சதி இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து விசாரணையை தீவிரப்படுத்திய […]
சென்னை : மாமல்லபுரத்தில் நோ பார்க்கிங் வழியே சென்ற காரை தடுத்த காவலாளி மீது, காரில் இருந்த 2 பெண்கள் உள்பட 4 பேர் காவலரைச் சரமாரி தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விதிமுறைகளின் படி, நோ பார்க்கிங் போட்டிருந்தால், அந்த பகுதியில் வாகனத்தை நிறுத்தக்கூடாது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், அதையும் மீறி அந்த சாலையில், காரில் வந்த 4 பேர் தங்களுடைய வாகனத்தை இங்கே தான் நிறுத்துவோம் என்கிற தோரணையில் பேசி, […]
நாமக்கல் : தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கொட்டித் தீர்த்த கனமழை காரணமாக, ஆங்காங்கே தண்ணீர் தேங்கியதால் வாகன ஒட்டிகள் சிரமங்களுக்கு ஆளாகி உள்ளனர். தற்பொழுது, நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம், குமாரபாளையம் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், பள்ளிபாளையம் நகரம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் மழை தொடர்ந்து பெய்து வருவதால் இன்று (22-10-2024) மட்டும் அப்பகுதியைச் சேர்ந்த பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவித்துள்ளார். பள்ளிபாளையம் நகரம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் […]
சென்னை : வளிமண்டல மேலடுக்கு சுழற்சியானது, தமிழகத்திற்கு மேலாக நிலவி வருகிறது. அதே நேரம் தெற்கு திசையில் கர்நாடக பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சியானது நிலவி வருகிறது. இந்த விளைவாக தமிழக்தில் சில மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. முன்னதாக, தமிழகத்தில் உள்ள 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்திருந்த நிலையில், ஆரஞ்சு அலர்ட்டும் விடுக்கப்பட்டது. இந்த நிலையில், தற்போது இரவு 10 மணி […]
சென்னை : நடிகர் கமல்ஹாசன், மக்கள் நீதி மையம் என்ற கட்சியை தொடங்கும் போது அவருக்கு உறுதுணையாக இருந்தவர் நடிகை கௌதமி. அதன்பிறகு, அங்கிருந்து விலகி பாஜகவில் இணைந்து பல பொறுப்புகள் ஏற்று பல பணிகளை செய்து வந்தார். அதன் பின், பாஜகவுடன் சில முரண்பாடுகள் ஏற்பட்டதால் சில மாதங்களுக்கு முன்பு பாஜகவில் இருந்து விலகுவதாக அவர் அறிவித்தார். இதன் பிறகு, அதிமுகவில் இணைந்தார். இந்த நிலையில், தற்போது அவருக்கு அதிமுகவில் கொள்கை பரப்பு துணைச் செயலாளராக […]
சென்னை : நேற்று சென்னை மெரினா கடற்கரையில் ஒரு தம்பதி ரோந்து பணியில் இருந்த போலீசாரிடம் தகாத வார்த்தைகளில் பேசி சர்ச்சையில் சிக்கியுள்ளனர். நேற்று, மெரினா கடற்கரை லூப் சாலையில் ஒருவர் தனது காரை போக்குவரத்திற்கு இடைஞ்சலாக நிறுத்தி இருந்ததாக தெரிகிறது. இதனை அடுத்து அங்கு ரோந்து பணிக்கு வந்த போலீசார் காரை நிறுத்தி காரினுள் இருந்த தம்பதியிடம் நீங்கள் யார் எனக் கேட்டு காரை எடுக்க சொல்லி கூறியுள்ளனர் என தெரிகிறது. உடனே அந்த தம்பதி […]
சென்னை : தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. கர்நாடக மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் சில மாவட்டங்களில் இன்று கனமழை முதல் மிக மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது. இந்த நிலையில், இன்று தமிழகத்தில் 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது. அதன்படி, […]
சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே, (செப்டம்பர் 23.10.2024) புதன்கிழமை பல மாவட்டங்களில் மின்தடை ஏற்படும் எனத் தமிழக மின்சார வாரியம் அறிவித்துள்ளது. அது என்னென்ன, பகுதி என்பதைக் கீழே பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள்… கோவை கரையாம்பாளையம், சின்னியம்பாளையம், மிலாம்பட்டி, ஆர்.ஜி.புதூர், கைக்கோலம்பாளையம், வெங்கிட்டாபுரம். குனியமுத்தூர், சுந்தராபுரம் கட்சி, கோபித்தூர், புட்டுவிக்கி பி.ஜி.பாளையம், குமாரபாளையம், மலபாளையம், வேதவேடம்பட்டி, வதம்பச்சேரி, மந்திர்பாளையம். சென்னை மீஞ்சூர் டவுன், […]
சென்னை : வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின் பேரில், போக்குவரத்துத் துறையின் சார்பில் மேற்கொள்ளப்படும் சிறப்பு ஏற்பாடுகள் மற்றும் சிறப்பு பேருந்துகள் இயக்கம் குறித்த ஆலோசனைக் கூட்டம் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில், இன்று (21/10/2024) தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் போக்குவரத்துத் துறையை சார்ந்த அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் திருக பணீந்திரரெட்டி, போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய […]
சென்னை : அக்டோபர் 31-ல் தீபாவளி கொண்டாடப்படும் நிலையில், சென்னை உள்ளிட்ட பிற நகரங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில், சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு, செய்தியாளர்களை சந்தித்து பேசினார். செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அமைச்சர் சிவசங்கர், வரும் அக்டோபர் 28ம் தேதி முதல் 3 நாட்களுக்கு வழக்கமான பேருந்துகளுடன் மொத்தமாக 14,016 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுமென அறிவித்துள்ளார். அதன்படி, சென்னையில் […]
சென்னை : இன்று தமிழக அரசின் அறநிலையத்துறை சார்பில் தமிழ்நாடு முழுக்க பல்வேறு கோயில்களில் 304 இணைகளுக்கு (ஜோடிகளுக்கு) திருமணம் நடைபெற்றது. சென்னை திருவான்மியூர் மருந்தீசுவரர் கோயிலில் நடைபெற்ற விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 31 இணைகளுக்கு திருமணம் நடைபெற்றது. இந்த விழாவில், அறநிலையத்துதுறை அமைச்சர் சேகர்பாபு, அமைச்சர் பொன்முடி ஆகியோர் கலந்து கொண்டனர். திருமணமாகிய இணைகளுக்கு தாலிக்கு 4 கிராம் தங்கம் , ரூ.60 ஆயிரம் மதிப்புள்ள சீர்வரிசை பொருட்கள் ஆகியவை வழங்கப்பட்டன. இந்த விழாவில் […]
சென்னை : தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் படிப்பு மற்றும் மற்ற திறமைகளில் சிறந்து விளங்கும் மாணவர்கள் மற்றும் சிறப்பாக செயல்படும் ஆசிரியர்களுக்கு விருதுகள், கல்வி சலுகைகள் வழங்கி கௌரவிப்பதோடு அவர்களை மேலும் ஊக்கப்படுத்தும் வகையில் வெளிநாடு இன்ப சுற்றுலாவுக்கும் அழைத்து சென்று வருகிறது தமிழக அரசு. அண்மையில், 2023-24ஆம் கல்வியாண்டில் “கனவு ஆசிரியர்” விருது பெற்ற 55 ஆசிரியர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் உத்தரவின் பெயரில் பிரான்ஸ் நாட்டிற்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லவுள்ளோம் என்றும், பிரான்ஸ் நாட்டின் […]