சென்னை : வடதமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், 2 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் எனவும் திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக […]
சென்னை : கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகையை வழங்க ரூ.247 கோடி ஒதுக்கி உத்தரவிட்டுள்ளது தமிழக அரசு. அதன்படி, 2023 மற்றும் 2024 ஆண்டுகளில் அரவை பருவத்திற்காக சர்க்கரை ஆலைகளுக்கு பதிவு செய்தோருக்கும் சிற்பபு ஊக்கத்தொகை வழங்கப்படும் என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர். மேலும், சர்க்கரை ஆலைக்கும் இந்த சிறப்பு ஊக்கத்தொகையானது வழங்கப்படும் எனவும் சிறப்பு ஊக்கத்தொகையுடன் சேர்த்து டன் ஒன்றுக்கு ரூ.3134.75 ரூபாயும் வழங்கப்படும் என உறுதி செய்யப்பட்டுள்ளது என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இது […]
சென்னை : தீபாவளி பண்டிகைக்கு வெளியூருக்குச் சென்று குடும்பத்துடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவார்கள். அப்படி, கொண்டாடிவிட்டு அடுத்த நாள் அவர்களது வீட்டுக்கு மற்றும் வேலைக்கு திரும்புவோருக்கு சிரமமாக அமையும் என்பதர்காக தமிழக அரசு தற்போது ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில், “அரசு அலுவலகங்கள், பொதுத் துறை நிறுவனங்கள் , பள்ளி. கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு வரும் நவம்பர்-1ம் தேதி அன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 31-ம் தேதி வியாழக்கிழமை தீபாவளி கொண்டாடப்படுவதை முன்னிட்டு, அடுத்த […]
சென்னை : அரபிக்கடல் மற்றும் வங்கக்கடலில் அடுத்தடுத்து 2 புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதிகள் உருவாகவுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்றைய நாள் தெரிவித்திருந்தது. இதனால் தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரி என 21 மாவட்டங்களுக்கு இன்று காலை 10 மணி வரையில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், விருதுநகர், மதுரை, […]
சென்னை : இந்தி மாதம் நிறைவுக் கொண்டாட்ட விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்தை பாடியவர்கள் ‘தெக்கணமும் அதிர்ச்சிறந்த திராவிட நல் திருநாடும்’ என்ற வரிகளை விட்டுவிட்டு பாடிய சம்பவம் அரசியல் களத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உட்ப்ட பலர் கடும் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். மேலும், மக்களின் உணர்வுகளை தொடர்ந்து அவமதித்து வரும் ஆளுநரை உடனடியாகத் திரும்ப பெற வேண்டும் என ஒன்றிய அரசுக்குக் கோரிக்கை வைத்தும் […]
சென்னை : நேற்று சென்னையில் நடைபெற்ற இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழாவில் ஆளுநர் ரவி, தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாடும் போது திராவிடம் என்கிற வார்த்தை விட்டு விட்டு பாடப்பட்டதால் பெரிய சர்ச்சையை வெடித்தது. இதற்கு, அரசியல் கட்சித் தலைவர்கள், அமைச்சர்கள் என பலரும் தங்களுடைய கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருந்தார். அதற்கு பதிலளிக்கும் விதமாக ஆளுநர் ரவி, இனவாத கருத்தைத் தெரிவித்து, என் மீது பொய்யான […]
சென்னை : ஆளுநர் ஆர். என். ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா பெரும் சர்ச்சையில் முடிந்துள்ளது. சர்ச்சைகள் ஏற்பட முக்கிய காரணமே, நிகழ்ச்சியில் தமிழ்த் தாய் வாழ்த்து பாடும் போது “தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல் திருநாடும்” என்ற வரியை விட்டு பாடியது தான். மு.க.ஸ்டாலின் கண்டனம் இந்த விவகாரம் சர்ச்சையாக வெடித்த நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் ” ஆளுநரா? ஆரியநரா? என்ற […]
சென்னை : இன்று சென்னையில் நடைபெற்ற இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழாவில் ஆளுநர் ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டிருந்தார். நிகழ்ச்சியில் தமிழ்த் தாய் வாழ்த்து பாடும் போது “தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல் திருநாடும்” என்ற வரியை விட்டு விட்டு அதற்கு அடுத்த வரியான தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே பாடல் வரி பாடப்பட்டது. திராவிடம் என்கிற வார்த்தை விட்டு விட்டு தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டதால் பெரிய சர்ச்சையே வெடித்தது. இதற்கு பலரும் தங்களுடைய கண்டனங்களை […]
சென்னை : இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா இன்று டிடி தமிழ் அலுவலகத்தில் நடைபெற்றது. அதில் ஆளுநர் ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டிருந்தார். நிகழ்ச்சியில் தமிழ்த் தாய் வாழ்த்து பாடும் போது “தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல் திருநாடும்” என்ற வரியை விட்டு விட்டு அதற்கு அடுத்த வரியான தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே பாடல் வரி பாடப்பட்டது. இதன் காரணமாக ஆளுநர் ரவி பங்கேற்ற விழாவில் பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்தில் திட்டமிட்டுத் தவிர்க்கப்பட்டதா? என […]
சென்னை : இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா இன்று டிடி தமிழ் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் ஆளுநர் ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டிருந்தார். இந்த விழா தொடங்கியது எதிர்ப்புகளுக்கு மத்தியில் முடிந்தது சர்ச்சையில் என்று தான் சொல்லவேண்டும். ஏனென்றால், இந்த நிகழ்ச்சி நடைபெறுவது இந்தி திணிப்பு எனப் பல அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களுடைய எதிர்ப்புகளைத் தெரிவித்து இருந்தார்கள். குறிப்பாகச் சொல்லவேண்டும் என்றால், முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு இது குறித்து எதிர்ப்பு தெரிவித்து […]
சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே, (செப்டம்பர் 19.10.2024) சனிக்கிழமை பல மாவட்டங்களில் மின்தடை ஏற்படும் எனத் தமிழக மின்சார வாரியம் அறிவித்துள்ளது. அது என்னென்ன, பகுதி என்பதைக் கீழே பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள்… கோவை சூலூர், டி.எம்.நகர், ரங்கநாதபுரம், எம்.ஜி.புதூர், பி.எஸ்.நகர், கண்ணம்பாளையம், காங்கேயம்பாளையம், ராவுத்தூர் காந்திபுரம், சித்தாபுதூர், டாடாபாத், ஆவாரம்பாளையம் பகுதி, மேட்டுப்பாளையம் சாலை, சர்க்யூட் ஹவுஸ், விமானப்படை, சுக்ரவார்பேட்டை, மரக்கடை, […]
சென்னை : டிடி தமிழ் அலுவலகத்தில் “இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா” மிகப்பெரிய எதிர்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சி நடைபெறுவது இந்தி திணிப்பு எனப் பல தரப்பிலிருந்து கண்டனங்கள் எழுந்த நிலையில், நிகழ்ச்சியில் ஆளுநர் பேசியதும், தமிழ்த்தாய் வாழ்த்து தவறாகப் பாடப்பட்டதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நிகழ்ச்சியில் ஆளுநர் முன்னிலையில், அங்கிருந்தவர்கள் தமிழ்த் தாய் வாழ்த்து பாடலை பாடினார்கள். தொடக்கத்திலே தடுமாறி தான் பாடிக்கொண்டு இருந்தார்கள். அப்போது, “தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல் திருநாடும்” […]
சென்னை : டிடி தமிழ் அலுவலகத்தில் “இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா” நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக ஆளுநர் ஆர்.என். ரவி கலந்து கொண்டுள்ளார். இந்த நிகழ்ச்சி நடைபெறுவது இந்தி திணிப்பு எனப் பல தரப்பிலிருந்து எதிர்ப்புகள் கிளம்பியது. அரசியல் காட்சிகளின் தலைவர்கள் பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இருந்தார்கள். குறிப்பாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டில் இந்தி மாத கொண்டாட்டம் வேண்டாம் எனவும் இந்தி பேசாத மாநிலங்களில் இந்தி மாதம் கொண்டாடப்படுவதும் பிற […]
சென்னை : தொலைக்காட்சி நிலையத்தின் “இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா” மற்றும் சென்னைத் தொலைக்காட்சியின் பொன்விழா கொண்டாட்டங்கள் இன்று நடைபெறும் எனவும் , இந்த விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்வார் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பு வெளியானதிலிருந்து இப்போது வரை இது இந்தி திணிப்பு எனப் பல தரப்பிலிருந்து எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. குறிப்பாக, இதனை பார்த்த தமிழ் ஆர்வலர்கள் கடும் கோபத்துடன் இந்தி பேசாத மாநிலங்களில் என்ன காரணத்துக்காக இந்தி […]
சேலம் : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு விக்கிரவாண்டி பகுதியில் வரும் அக்டோபர் 27-ஆம் தேதி நடைபெற உள்ளது. மாநாடு நடைபெற இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், அதற்கான வேலைகளில் கட்சியினரும், கட்சியின் பொதுச்செயலாளருமான புஸ்ஸி ஆனந்த் மும்மரமாக ஈடுபட்டு வருகிறார்கள். மாநாடு தொடங்குவதை முன்னிட்டு சேலம் மாவட்டம் ஆத்தூர் அம்மாபளையத்தில் தனியார் திருமண மண்டபத்தில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளுக்கு அரசியல் பயிலரங்கம் தொடங்கியது. இதனைக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் […]
சென்னை : வங்க கடலில் இதற்கு முன்னர் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று அதிகாலை கரையைக் கடந்தது. இதன் காரணமாக, இன்றும் (18/10/2024) சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு,திருப்பத்தூர், விழுப்புரம், கடலூர், ராணிப்பேட்டை, வேலூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இதனைத் தொடர்ந்து, வங்கக்கடலில் மீண்டும் காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் கடலோர மாவட்டங்களில் மழைக்கு […]
தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதைப்போல, மத்தியகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று பல மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் எனவும், […]
விழுப்புரம் : நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் இன்று விழுப்புரத்தில் நடைபெற்ற கட்சி நிகழ்வில் கலந்து கொண்டு பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் பேசுகையில், “நான் நெய்தல் படை அமைப்பேன் என நான் கூறினால் சிரிக்கிறார்கள். நான் கூறியதை போல தானே கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் கேரளாவில் நெய்தல் படை ஆரம்பித்துள்ளார். அப்போ, பினராயி விஜயனை பார்த்து சிரிக்க வேண்டியது தானே. கடலில் என் மக்களை என் நாட்டு ராணுவம் காப்பாற்றவில்லை. அப்படி […]
சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் மாநாடு வரும் அக்டோபர் 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு மாநாடு வேலைகளில் அக்கட்சி பொதுச்செயலாளர் N.ஆனந்த் (புஸ்ஸி ஆனந்த்) மிக தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். அப்போது கட்சிப் பணி சார்ந்து அவரை சந்திக்க வரும் நிர்வாகிகள் ஆனந்த்தின் காலில் விழுந்து வணங்குகின்றனர். சமீபத்தில் கூட நடிகர் தாடி பாலாஜி (தவெக கட்சி உறுப்பினர்) புஸ்ஸி ஆனந்தை சந்திக்கும் போது அவர் காலை தொட்டு வணங்க […]
டெல்லி : தலைநகர் டெல்லியின் மிகப் பெரும் பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது காற்று மாசு. கடந்த சில ஆண்டுகளாக இதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. டெல்லிக்கு அருகாமையில் உள்ள ஹரியானா, பஞ்சாப் மாநிலங்களில் மீதமுள்ள விவசாய பொருட்களை எரிப்பதால் வரும் புகை டெல்லி காற்றை அதிகளவில் பாதிக்கிறது. மேலும், டெல்லியில் அதிகரித்து வரும் வாகன பயன்பாடும் டெல்லியில் காற்று மாசு அதிகரிக்க காரணமாக அமைகிறது. அதனை கட்டுப்படுத்தவும், வாகன கட்டுப்பாட்டை அரசு அவ்வப்போது […]