தமிழ்நாடு

அரசு பஸ் ஸ்டிரைக் தொடரும் – தொழிற்சங்கங்கள் அறிவிப்பு

அரசு போக்குவரத்துக்கு ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டம் தொடரும் என தொழிற்சங்க கூட்டமைப்பினர் அறிவித்துள்ளது. ஊதிய உயர்வு, தற்காலிக பணியாளர்களுக்கு நிரந்தர பணி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திட்டமிட்டபடி போக்குவரத்து கழகங்களில் செயல்படும், தொ.மு.ச., சி.ஐ.டி.யூ., எச்.எம்.எஸ்., டி.டி.எஸ்.எப்., எம்.எல்.எப்., ஏ.ஏ.எல்.எல்.எப்., டி.டபிள்யூ.யு. ஆகிய தொழிற்சங்கங்கள் இன்று அதிகாலை முதல் வேலை நிறுத்தத்தில் இறங்கியுள்ளனர். இந்த வேலை நிறுத்தத்ததால் தமிழகத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னையில் நடந்த தொழிற்சங்க கூட்டமைப்பின் ஆலோசனைக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய சிஐடியூ […]

#Strike 3 Min Read
Default Image

விஜயகாந்த், பிரேமலதாவிற்காக தேமுதிகவினர் விருப்பமனு..!

விஜயகாந்த், பிரேமலதா மற்றும் விஜயபாஸ்கரன் போட்டியிட தேமுதிகவினர் விருப்பமனு அளித்துள்ளனர். தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான விருப்ப மனுக்களை பெறுவதற்கான தேதியை அதிமுக, திமுக மற்றும் மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் அறிவித்த நிலையில்  தேமுதிக சார்பில் இன்று விருப்ப மனு விநியோகம் தொடங்கியது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிட சென்னை கோயம்பேடு தேமுதிக தலைமை அலுவலகத்தில் விருப்ப மனு விநியோகம் இன்று தொடங்கியது. இந்நிலையில், தேர்தலில் விஜயகாந்த், மனைவி பிரேமலதா, மகன் […]

#DMDK 2 Min Read
Default Image

தோழர் தா.பாண்டியன் விரைந்து நலன் பெற்று மக்கள் தொண்டினைத் தொடர வேண்டும் – முக ஸ்டாலின்

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தா.பாண்டியன் விரைவில் குணமடைந்து வர வேண்டும் என முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியனின் உடல்நிலை பாதிப்பு காரணமாக சென்னை ராஜீவ் காந்தி அரசினர் பொது மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், இதுகுறித்து திமுக தலைவர் முக ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், உடல் நலிவுற்று சிகிச்சை பெற்று வரும் பொதுவுடைமை இயக்கத்தின் மூத்த தலைவர் தோழர் தா.பாண்டியன் அவர்கள் […]

#DMK 2 Min Read
Default Image

தொகுதி பங்கீடு: திமுகவுடன் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடக்கும் – கேஎஸ் அழகிரி

தொகுதி பங்கீடு குறித்து திமுகவுடன் 2ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் என தமிழக காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இன்று திமுக, காங்கிரஸ் இடையே முதற்கட்டமாக தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இதில், திமுக சார்பில் துரைமுருகன், டி.ஆர்.பாலு மற்றும் கனிமொழி ஆகியோரும், காங்கிரஸ் தரப்பில் உம்மன்சாண்டி, ரன்தீப்சிங் சுர்ஜிவாலா, தினேஷ் குண்டுராவ், கே.எஸ்.அழகிரி ஆகியோரும் கலந்து கொண்டு பேச்சுவார்த்தை நடத்தினர். இந்நிலையில், […]

#Congress 3 Min Read
Default Image

#BREAKING : துணை ராணுவப் படை தமிழகம் வந்தடைந்தன..!

தமிழக சட்டப்பேரவை தேர்தல் பாதுகாப்பு பணிக்காக துணை ராணுவப் படை  4,500 பேர் சென்னை வந்தடைந்தனர்.  இந்த மாத இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஏப்ரல் மாத இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால், முதற்கட்டமாக மத்திய ஆயுதப்படை 45 கம்பெனி போலீசார் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக தமிழக வருவதாகவும், இதற்கான உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளதாக சமீபத்தில் தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு […]

Paramilitary 3 Min Read
Default Image

#breaking: 9,10,11ம் வகுப்பு மாணவர்கள் ஆல் பாஸ் – சட்டப்பேரவையில் முதல்வர் அறிவிப்பு.!

9,10,11-ம் வகுப்பு மாணவர்கள் ஆல் பாஸ் என தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். சென்னை கலைவாணர் அரங்கத்தில் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழக சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானத்தை சபாநாயகர் தனபால் வாசித்தார். இதன்பின் இடைகால நிதி நிலை அறிக்கை தொடர்பான விவாதம் நடைபெற்று வருகிறது. இதனிடையே, 9,10,11-ம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வுயின்றி தேர்ச்சி பெறுவதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். 9,10,11-ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்ற […]

#TNSchools 2 Min Read
Default Image

#BreakingNews : அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 60 ஆக உயர்வு – முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு

தமிழகத்தில் அரசு பணியாளர்கள் ஓய்வுபெறும் வயது 60ஆக உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.  கடந்த 23-ஆம் தேதி சென்னை வாலாஜாசாலையில் உள்ள கலைவாணர் அரங்கில் தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்றது. இதில், துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தனது 14-வது நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்தார். இந்த நிதி நிலை அறிக்கையில் பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து இன்று முதல் வரும் 27-ம் தேதி வரை தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறும் […]

#TNAssembly 3 Min Read
Default Image

நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி புதிய கட்சியை தொடங்கிய நடிகர் மன்சூர் அலிகான்.!

சீமானின் நாம் தமிழர் கட்சியில் இதுவரை இருந்த மன்சூர் அலிகான் திடீரென அக்கட்சியில் இருந்து விலகி புதிய கட்சியை தொடங்கியுள்ளார். சீமானின் நாம் தமிழர் கட்சியில் இதுவரை இருந்த மன்சூர் அலிகான், இன்று தனது கட்சியின் பெயரை அறிவிக்க இருப்பதாகவும் தனது அலுவலகத்தில் நடைபெறும் பத்திரிகையாளர் சந்திப்பில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்பட்டு வந்த நிலையில், நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி, தமிழ்த் தேசிய புலிகள் கட்சி என்ற தனி கட்சியை […]

#MansoorAliKhan 5 Min Read
Default Image

#BREAKING: டிடிவி தினகரனை முதல்வராக்க அமமுக தீர்மானம்..!

அதிமுகவை மீட்டெடுத்து டிடிவி தினகரனை முதல்வராக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் கழகத்துணைத் தலைவர் S.அன்பழகன் (முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்)  தலைமையில் காலை 9 மணிக்கு தொடங்கியது. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் முழுமையாக பின்பற்றி தமிழகத்தின் 10 இடங்களை காணொளி வாயிலாக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டங்களில் கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இதில், அதிமுகவை மீட்டெடுத்து டிடிவி தினகரனை முதல்வராக்கவும், அமமுக கூட்டணி […]

#AMMK 2 Min Read
Default Image

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் மீண்டும் தொடங்கியது.! பட்ஜெட் குறித்து விவாதம்.!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இடைகால நிதி நிலை அறிக்கை தொடர்பான விவாதம் இன்று நடக்க உள்ளது. கடந்த 23-ஆம் தேதி சென்னை வாலாஜாசாலையில் உள்ள கலைவாணர் அரங்கில் தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்றது. இதில், துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தனது 14-வது நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்தார். இந்த நிதி நிலை அறிக்கையில் பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து, பிப்.25 இன்று முதல் வரும் 27-ம் தேதி வரை […]

#TNAssembly 3 Min Read
Default Image

#BREAKING: காங்கிரஸ் – திமுக கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கியது..!

திமுக, காங்கிரஸ் இடையே அதிகாரப்பூர்வமாக தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை தொடங்கியது. திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவதற்காக கேரளா முன்னாள் முதலமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான உம்மன்சாண்டி நேற்று வருகை தந்தார். நேற்று காங்கிரஸ் மேலிடப்பொறுப்பாளர்கள் ஆலோசனை நடத்தினர். 4 மணி நேரத்திற்கு மேலாக நடந்த ஆலோசனையில் எந்த தொகுதி , எத்தனை தொகுதி என்பது குறித்து விவாதம் செய்யப்பட்டது. காங்கிரஸ் சார்பில் 30 தொகுதிகள் கேட்க திட்டமிட்டுள்ளதாகவும், ஆனால் திமுக சார்பில் 20 முதல் 25 […]

#Congress 3 Min Read
Default Image

ஹெலிகாப்டர் மூலம் புதுச்சேரி செல்கிறார் பிரதமர் மோடி

 பிரதமர் மோடி தனி விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். சென்னை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் புதுச்சேரி செல்கிறார் பிரதமர். புதுச்சேரி செல்லும் பிரதமர் மோடி காரைக்கால் மாவட்டத்தை உள்ளடக்கிய விழுப்புரம் – நாகப்பட்டினம் வரையிலான 56 கி.மீ தூரம் 4 வழி தேசிய நெடுஞ்சாலை திட்டத்துக்கு அடிக்கல் நாட்டுகிறார்.காரைக்கால் மாவட்டத்தில் ஜிப்மர் மருத்துவ கல்லூரி கட்டிடத்துக்கும் அவர் அடிக்கல் நாட்டுகிறார். இத்திட்டத்தின் மதிப்பீட்டு செலவு ரூ.491 கோடி.சாகர்மாலா திட்டத்தின் கீழ் புதுச்சேரியில் சிறு […]

#PMModi 4 Min Read
Default Image

இந்தெந்த மாநிலத்தில் இருந்து வருவோர் 7 நாள் தனிமை கட்டாயம் – தமிழக அரசு

கொரோனா பரவல் காரணமாக தமிழகம் வருவோர்கள் 7 நாட்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசின் அறிவிப்பில், கேரளா, மகாராஷ்டிராவில் ஆகிய மாநிலங்களில் இருந்து தமிழகம் வருவோர்கள் தங்களை கட்டாயம் 7 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என அறிவித்துள்ளது. வெளி மாநிலங்களிலிருந்து தமிழகம் வருவோர் கொரோனா அறிகுறி தென்பட்டால் பரிசோதனை செய்ய வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளது. சோதனையில் பாசிட்டிவ் என வந்தால் மருத்துவமனை, கோவிட் கேட் மையங்களில் தங்க வைக்கப்படுவர். வெளிநாடுகளிலிருந்து […]

#Kerala 3 Min Read
Default Image

பேருந்து ஸ்டிரைக் – கூடுதலாக மெட்ரோ ரயில்..!

பேருந்து ஸ்டிரைக் கருத்தில் கொண்டு இன்று காலை 7 மணி முதல் 11 மணி மற்றும் மாலை 4 மணி முதல் 8 மணி வரை 5 நிமிடத்திற்கு ஒரு முறை இயக்கப்படும் என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. போக்குவரத்து சங்கத்தினர், ஓய்வூதியப் பலன், ஊதிய உயர்வு, தற்காலிக ஊழியர்களுக்கு நிரந்தர பணி, உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், இன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட போவதாக அறிவித்திருந்தது. இன்று பணிக்கு […]

ChennaiMetro 2 Min Read
Default Image

மாற்றமின்றி விற்பனையாகும் முட்டை விலை..!

நாமக்கல் மண்டலத்தில் இன்று ஒரு முட்டையின் பண்ணைகொள்முதல் விலை கடந்த 20 ஆம் தேதியிலிருந்து மாற்றமின்றி 4.30 காசுகளாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவல் ஏற்பட்ட துவக்கத்தில் அதிகளவில் அடி வாங்கிய வியாபாரம் என்றால் அது முட்டை வியாபாரம் தான். கிட்டத்தட்ட 1 ரூபாய்க்கும் கீழ் குறைந்து விற்பனை செய்யப்பட்டது. அதற்கு பிறகு முட்டை விலை ஏற்றம் மற்றும் இறக்கத்தை கண்டு வருகிறது. இந்த நிலையில், தேசிய முட்டை ஒருங்கிணைப்ப உறுப்பினர்கள் […]

#Chennai 2 Min Read
Default Image

நரேந்திர மோடி, அம்பானி, அதானி மூவரும் சுதந்திரப்போரட்ட தியாகிகள்…!எம்.பி.ஜோதிமணி ட்வீட்…!

கிரிக்கெட் மைதானத்துக்கு பிரதமர் மோடியின் பெயர் சூட்டப்பட்டுள்ளது குறித்து எம்.பி.ஜோதிமணி ட்வீட்.  குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், மொடேராவில் கட்டப்பட்டுள்ள உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தை திறந்து வைத்தார். இந்த அரங்கத்தில் 1.10 லட்சம் ரசிகர்கள் கிரிக்கெட் போட்டிகளை கண்டு ரசிக்கலாம். 2018-ஆம் ஆண்டு குஜராத் கிரிக்கெட் சங்கத்தால், புதிய அரங்கத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.  உலகின் மிகப் பெரிய  படேல் கிரிக்கெட் மைதானத்துக்கு பிரதமர் மோடியின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதுகுறித்து எம்.பி.ஜோதிமணி தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘நரேந்திர […]

cricket stadium 3 Min Read
Default Image

தொடர்ந்து 3-வது முறையாக கொளத்தூர் தொகுதியில் களமிறங்குகிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்…!

திமுக தலைவர் ஸ்டாலின் தொடர்ந்து 3-வது முறையாக கொளத்தூர் தொகுதியில் போட்டியிட விருப்பமனுவை இன்று அளிக்க உள்ளார்.  தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ளது.  இதனையடுத்து, அணைத்து காட்சிகளிலும் விருப்பமனு விநியோகம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில், திமுக சார்பில்,  2021-தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவை பொதுத்தேர்தலில்,திமுக வேட்பாளராகப் போட்டியிட விரும்புவோர் 17-02-2021 முதல் 24-02-2021 வரை தலைமைக் கழகத்தில் விண்ணப்பம் செய்யலாம் என பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்திருந்தார். இந்நிலையில், 24-ம் […]

#DMK 3 Min Read
Default Image

தொடர்ந்து அதிகரிக்கும் சிலிண்டர் விலை…! ஒரே மாதத்தில் 3-வது முறையாக சிலிண்டர் விலை உயர்வு…!

இன்று சிலிண்டரின் விலை மேலும் ரூ.25 அதிகரித்துள்ளது. இதனால் சிலிண்டரின் விலை தற்போது ரூ.810 ஆக விற்பனை செய்யப்படுகிறது. பொதுமக்கள் தங்களது அன்றாட வாழ்வில் பயன்படுத்தக்கூடிய பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலைகள் தொடர்ந்து அதிகரித்து வருவது பொதுமக்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வருடம் டிசம்பர் மாதம் 15ஆம் தேதி சிலிண்டரின் விலை ரூ.710 ஆக இருந்தது.  இந்நிலையில், இந்த மாதம் (பிப்ரவரி ) 4-ம் தேதி ரூ.25 ரூபாய் அதிகரித்து ரூ.735 ஆக விற்பனை […]

#cylinder 3 Min Read
Default Image

தமிழக்தை அச்சுறுத்தும் உருமாறிய கொரோனா…!

தமிழகத்தில், குறைவான நபர்கள் மட்டுமே மருத்துவமனையில் உள்ளது ஆறுதல் அளித்தாலும், அண்டை மாநிலங்களில் பரவும் புதிய வகை கொரோனாவால், சற்று அச்சம் ஏற்படுகிறது. கொரோனா வைரஸ் உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வருகிறது. தற்போது தடுப்பூசிகள் போடப்பட்டு வந்தாலும், புதிதாக பரவி வரும் உருமாறிய கொரோனா வைரஸ் பல இடங்களில் மக்களை அச்சுறுத்தி வருகிறது. அந்த வகையில், இந்தியாவில், கேரளா, பஞ்சாப், மஹாராஷ்டிரா, சட்டிஸ்கர் மற்றும் மத்திய பிரதேசம் சட்டிஸ்கர்  மாநிலங்களில் உருமாறிய கொரோனா வைரஸால் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். […]

#Corona 3 Min Read
Default Image

திட்டமிட்டபடி தொடங்கிய வேலைநிறுத்தம்…! அரசு பேருந்து சேவைகள் பாதிப்பு…!

தமிழகம் முழுவதும் இந்த வேலைநிறுத்த போராட்டம் தொடங்கியுள்ள நிலையில், அரசு போக்குவரத்து சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.  தமிழக அரசை போக்குவரத்து சங்கத்தினர், ஓய்வூதியப் பலன், ஊதிய உயர்வு, தற்காலிக ஊழியர்களுக்கு நிரந்தர பணி, உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரிதொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், இன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட போவதாக அறிவித்திருந்தது. இந்நிலையில், இன்று பணிக்கு வராத போக்குவரத்து ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரித்து இருந்த நிலையில், அரசின் எச்சரிக்கையை மீறி, தமிழகம் முழுவதும் […]

bus strike 4 Min Read
Default Image