இது காசுக்காக அழைத்துவரப்பட்ட கூட்டமல்ல, தானா சேர்ந்த கூட்டம் என செல்லூர் ராஜூ பேட்டி. மின் கட்டண உயர்வை கண்டித்து அதிமுக மாவட்ட செயளாலர் செல்லூர் ராஜூ தலைமையில் மதுரை முனிசாலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, திமுகவிற்கு சரியான எதிரி அதிமுகதான். திமுகவிற்கு அடுத்து நாங்கள்தான் என கூறுபவர்களுக்கு இந்த ஆர்பாட்டம் ஒரு பாடம். இது காசுக்காக அழைத்துவரப்பட்ட கூட்டமல்ல, தானா சேர்ந்த கூட்டம். அதிமுக ஆட்சியில் […]
பெண்களுக்கு எப்போது மகளீர் உரிமை தொகை வழங்கப்படும் என மக்கள் நீதி மய்யம் கேள்வி எழுப்பியுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள ட்விட்டர் பதிவில், மக்கள் நீதி மய்யம் முதலில் முன்வைத்த“மகளிர் உரிமைத் தொகையானது”திமுகவின் தேர்தல் அறிக்கையிலும் இடம்பெற்றது. கடந்த சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின்போது குடும்பத்தலைவிகள் அனைவருக்கும் உரிமைத்தொகை வழங்கப்படும் என்றார் முதல்வர். ஆட்சிக்கு வந்தபின்னர், “…அனைவருக்கும் வழங்க முடியாது; உரிமைத்தொகை பெறத்தகுதியானவர்களைத் தேர்ந்தெடுத்து வழங்குவோம்” என்றார் நிதியமைச்சர். கடந்த பட்ஜெட்டின்போது, நிதிநிலைமை சரியானதும் வழங்கப்படும் என்று புதுநிலைப்பாடு […]
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களில் கனமழை என தகவல். தமிழகத்தில் 29-ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி, கடலூர், தஞ்சாவூர், திருவள்ளூர், நாகை, மயிலாடுதுறை, […]
திருவள்ளூர் அருகே மாணவி தற்கொலை செய்துகொண்ட தனியார் பள்ளியில் காவல்துறை அதிகாரிகள் விசாரணை. திருவள்ளூர் மாவட்டம், மப்பேடு அருகே கீழச்சேரியில் உள்ள தனியார் பள்ளி விடுதியில் 12-ஆம் வகுப்பு பயிலும் மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவி தற்கொலை தொடர்பாக போலீஸ் விசாரணை நடத்தி வந்த நிலையில், தற்கொலை செய்துகொண்ட வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டது. மாணவி தற்கொலை செய்து கொண்டதை அடுத்து கிராம மக்கள் சாலை மறியல் […]
பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து முதல்வர் ட்வீட். இன்று பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்கள் தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு அரசியல் பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தனது ட்விட்டர் பக்கத்தில், ‘பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனரும் தமிழ்நாட்டின் மூத்த அரசியல் தலைவருமான மருத்துவர் ராமதாஸ் ஐயா அவர்களுக்குப் பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! சமூகநீதிக் களத்தில் மேலும் பல்லாண்டுகள் தாங்கள் தொடர்ந்து பணியாற்ற விழைகிறேன்.’ […]
மாணவர்களுக்கு இலவச சைக்கிள் தரும் திட்டத்தை சென்னையில் முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11, 12-ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் முக ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சென்னை நுங்கப்பாக்கத்தில் உள்ள ஆண்கள் மேல்நிலை பள்ளியில் இலவச மிதிவண்டி வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அடர்நீல நிறத்தில் வழங்கப்பட்டுள்ள சைக்கிளில் சுற்றுசூழல் பாதுகாப்பு பற்றிய வாசகங்கள் இடம்பெற்றுள்ளனர். முதற்கட்டமாக ஒரு […]
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், குடியரசு தலைவர் திரௌபதி முர்மு அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியாவின் 15-வது குடியரசு தலைவராக முதல் பழங்குடியினப் பெண் திரௌபதி முர்மு நாடாளுமன்ற மைய மண்டபத்தில் பதவியேற்றார். குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்வி ரமணா பதவி பிரமாணம் செய்து வைத்தார். குடியரசு தலைவராக பதவியேற்றுள்ள திரௌபதி முர்மு, நாட்டின் இரண்டாவது பெண் குடியரசுத் தலைவர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இந்த நிகழ்வில், பிரதமர் மோடி, உள்துறை […]
திருவள்ளூரில் பள்ளி விடுதியில் மாணவி தற்கொலை. கிராம மக்கள் சாலை மறியல். கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியின் மரணத்தின் வடுக்களே இன்னும் மறையாத நிலையில், திருவள்ளூரில் பள்ளி விடுதியில் மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த நிலையில், திருவள்ளூர் மாவட்டம், மப்பேடு அருகே கீழச்சேரியில் உள்ள தனியார் பள்ளி விடுதியில் பிளஸ் 2 பயிலும் மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். மாணவர்களுடன் இருந்து உணவருந்திவிட்டு சென்னார் அவர் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. இந்த […]
சர்வதேச சந்தை நிலவரத்தை படி கச்சா எண்ணெய் விலையை அடிப்படையாக கொண்டு பெட்ரோல்,டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கின்றன . இந்த நிலையில்,65-வது நாளாக பெட்ரோல்,டீசல் விலையில் எந்த மாற்றமும் இன்றி அதே விலையில் தொடர்கிறது. சென்னையில் இன்று(ஜூலை 25) பெட்ரோல் 1லிட்டர் ரூ.102.63க்கும், டீசல் 1லிட்டர் ரூ.94.24க்கும் விலை மாற்றம் இல்லாமல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்தியக் குடியரசுத் தலைவராக வெற்றிகரமாக தனது பணியினை நிறைவு செய்துள்ள ராம்நாத் கோவிந்திற்கு வாழ்த்து தெரிவித்து முதல்வர் கடிதம் எழுதியுள்ளார். இன்று இந்தியாவின் 15-வது குடியரசு தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள திரௌபதி முர்மு அவர்கள் பதவியேற்றுள்ளார். இந்த நிலையில், குடியரசுத் தலைவராக வெற்றிகரமாக தனது பணியை நிறைவு செய்துள்ள ராம்நாத் கோவிந்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், இந்திய குடியரசுத் தலைவராக உங்கள் பதவி காலத்தை வெற்றிகரமாக நிறைவு செய்ததற்கு எனது […]
புதுச்சேரியில் இருந்து கோவைக்கு வந்த செஸ் ஒலிம்பியாட் ஜோதிக்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர். சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் வரும் 28-ம் தேதி முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது. செஸ் ஒலிம்பியாட் போட்டிகளின் தொடக்க விழா மற்றும் நிறைவு விழா நிகழ்ச்சிகள் சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளன. செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்கான ஏற்பாடுகள் மாமல்லபுரத்தில் ஒருபுறம் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், தொடக்க விழா நிகழ்ச்சிகளை பிரம்மாண்டமாக […]
மின்கட்டண உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. தமிழகத்தில் 8 ஆண்டுகளுக்கு பின் மின் கட்டணம் உயர்த்தப்படுவதாகவும், கடந்த 10 ஆண்டுகளில் மின்சாரத்துறையில் ரூ.12,647 கோடி கடன் உயர்ந்துள்ளது என்றும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்திருந்தார். மின்கட்டண உயர்வு அரசில் பிரபலங்கள் பலரும் கண்டம் தெரிவித்து வரும் நிலையில், மின்கட்டண உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடை பெறவுள்ளது.
தமிழகத்தில் இன்று கொரோனாவால் புதிதாக 1,945 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் மட்டுமில்லாமல் இந்தியா முழுவதும் கொரோனாவின் பாதிப்பு சற்று அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை மாநில மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது. நேற்று 2,014 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று 1,945 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 419 பேர் பாதிக்கப் பட்டுள்ளனர். இன்று மட்டும் […]
தமிழகத்தில் அதிக வருமான வரி செலுத்திய நபர் ரஜினிகாந்த் என வருமான வரித்துறை விருது வழங்கி உள்ளது. தமிழ் சினிமாவில் கடந்த 40 வருடங்களாக நம்பர் 1 இடத்தை தக்க வைத்து வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது ஒவ்வொரு திரைப்படத்திற்கும் எதிர்பார்ப்பு வானளவு உயர்ந்து கொண்டே போகிறது. இவர்தான் தமிழ் சினிமாவில் தற்போது அதிகமாக சம்பளம் வாங்கும் நடிகர் என்று கூறப்படுகிறது. அதனை மெய்யாக்கும் விதமாக தற்போது வருமான வரித்துறை கடந்த வருடம் அதிகமாக வருமான […]
ஓரிகானின் யூஜினில் நடந்த உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் ஆடவர் ஈட்டி எறிதல் இறுதிப் போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா 88.13 மீட்டர் தூரம் எறிந்து வெள்ளிப் பதக்கத்தை வென்றார். நீரஜ் சோப்ரா வெற்றிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து செய்தியை ட்விட்டரில் தெரிவித்துள்ளார். நீரஜ் சோப்ரா மீண்டும் வரலாற்றை எழுதினார்உலக தடகள சாம்பியன்ஷிப்பில் பதக்கம் வென்ற இரண்டாவது இந்திய மற்றும் முதல் இந்திய ஆண் தடகள வீரர் ஆனதற்கு வாழ்த்துகள்.மிகப் பெரிய மேடையில் அவர் சாதித்து […]
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஓ.பன்னீர்செல்வம் தொற்றிலிருந்து முழுமையாக குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.
சர்வதேச சந்தை நிலவரத்தை படி கச்சா எண்ணெய் விலையை அடிப்படையாக கொண்டு பெட்ரோல்,டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கின்றன . இந்த நிலையில்,64-வது நாளாக பெட்ரோல்,டீசல் விலையில் எந்த மாற்றமும் இன்றி அதே விலையில் தொடர்கிறது. சென்னையில் இன்று(ஜூலை 24) பெட்ரோல் 1லிட்டர் ரூ.102.63க்கும், டீசல் 1லிட்டர் ரூ.94.24க்கும் விலை மாற்றம் இல்லாமல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் இன்று கொரோனாவால் புதிதாக 2,014 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் மட்டுமில்லாமல் இந்தியா முழுவதும் கொரோனாவின் பாதிப்பு சற்று அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை மாநில மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது. நேற்று 2,033 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று 2,014 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 431 பேர் பாதிக்கப் பட்டுள்ளனர். இன்று மட்டும் […]
எனக்கு சந்தோஷம், நிம்மதி 10 சதவீதம் கூட இல்லை என்று ஆன்மிக நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் ஓபன் டாக். சென்னை நுங்கம்பாக்கத்தில் நேற்று யோகதா சத்சங்க சொசைட்டி ஆஃப் இந்தியா சார்பில் நடந்த ஆன்மிக நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு பேசிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இந்த உலகத்தை விட்டு செல்லும்போது, சொத்து சேர்த்து வைத்து செல்வதை விட நோயாளியாக இல்லாமல் செல்வது முக்கியம். நோயாளியாக இருப்பது பிறருக்கு கஷ்டத்தை ஏற்படுத்தலாம். இதனால் உடல் ஆரோக்கியம் ஒருவருக்கு […]
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட நிர்வாகிகள் மீண்டும் செயல்பட அனுமதி வழங்கி ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை வெளியீடு. அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட நிர்வாகிகள் மீண்டும் செயல்பட அனுமதி வழங்கப்படுவதாக ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், அதிமுகவில் இருந்து பல்வேறு காரணங்களுக்காக நீக்கப்பட்ட அனைத்து நிர்வாகிகளும், அவர்களது வேண்டுகோளுக்கிணங்க, மீண்டும் அவரவர் பொறுப்புகளில் செயல்பட அனுமதிக்கப்படுகிறார்கள். ரத்து செய்யப்பட்ட ஊராட்சி செயலாளர், தொகுதிக் கழகச் செயலாளர் மற்றும் தொகுதிக் கழக இணைச் செயலாளர்கள் பதவிகள் மீண்டும் தோற்றுவிக்கப்பட்டு, ஏற்கெனவே பணிபுரிந்தவர்கள் […]