தமிழகத்தில் இன்று கொரோனாவால் புதிதாக 2,014 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் மட்டுமில்லாமல் இந்தியா முழுவதும் கொரோனாவின் பாதிப்பு சற்று அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை மாநில மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது. நேற்று 2,033 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று 2,014 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 431 பேர் பாதிக்கப் பட்டுள்ளனர். இன்று மட்டும் […]
எனக்கு சந்தோஷம், நிம்மதி 10 சதவீதம் கூட இல்லை என்று ஆன்மிக நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் ஓபன் டாக். சென்னை நுங்கம்பாக்கத்தில் நேற்று யோகதா சத்சங்க சொசைட்டி ஆஃப் இந்தியா சார்பில் நடந்த ஆன்மிக நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு பேசிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இந்த உலகத்தை விட்டு செல்லும்போது, சொத்து சேர்த்து வைத்து செல்வதை விட நோயாளியாக இல்லாமல் செல்வது முக்கியம். நோயாளியாக இருப்பது பிறருக்கு கஷ்டத்தை ஏற்படுத்தலாம். இதனால் உடல் ஆரோக்கியம் ஒருவருக்கு […]
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட நிர்வாகிகள் மீண்டும் செயல்பட அனுமதி வழங்கி ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை வெளியீடு. அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட நிர்வாகிகள் மீண்டும் செயல்பட அனுமதி வழங்கப்படுவதாக ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், அதிமுகவில் இருந்து பல்வேறு காரணங்களுக்காக நீக்கப்பட்ட அனைத்து நிர்வாகிகளும், அவர்களது வேண்டுகோளுக்கிணங்க, மீண்டும் அவரவர் பொறுப்புகளில் செயல்பட அனுமதிக்கப்படுகிறார்கள். ரத்து செய்யப்பட்ட ஊராட்சி செயலாளர், தொகுதிக் கழகச் செயலாளர் மற்றும் தொகுதிக் கழக இணைச் செயலாளர்கள் பதவிகள் மீண்டும் தோற்றுவிக்கப்பட்டு, ஏற்கெனவே பணிபுரிந்தவர்கள் […]
பார்வையிழந்த மாற்றுத் திறனாளி மாணவி ஓவியா, தமிழகத்தில் முதல்முறையாக சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வை மடிக்கணினியில் எழுதி, 91.40 சதவீத மதிப்பெண் பெற்றுள்ளார். கோயம்புத்தூரில் பயிலும் பார்வையிழந்த மாற்றுத் திறனாளி மாணவி ஓவியா, தமிழகத்தில் முதல்முறையாக சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வை மடிக்கணினியில் எழுதி, 91.40 சதவீத மதிப்பெண் பெற்றுள்ளார். இதற்கு மநீம பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து மநீம தனது ட்விட்டர் பக்கத்தில், ‘கோயம்புத்தூரில் பயிலும் பார்வையிழந்த மாற்றுத் திறனாளி மாணவி ஓவியா, தமிழகத்தில் முதல்முறையாக சிபிஎஸ்இ […]
குரூப் 4 தேர்வர்களுக்கான பின்பற்றவேண்டிய நடைமுறைகளை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் குரூப் 4 (TNPSC Group 4) பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு நாளை நடைபெறுகிறது. அதாவது, தமிழக அரசில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர், தட்டச்சர், அலுவலக உதவியாளர், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட குரூப் 4 பதவிகளில் காலியாக உள்ள 7,301 இடங்களை நிரப்புவதற்கான தேர்வு நாளை நடைபெறுகிறது. தமிழக முழுவதும் 7,689 மையங்களில் நடைபெறும் தேர்வை 22,02,942 பேர் எழுத […]
இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தை தமிழக முதலவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நாளை மறுநாள் தொடங்கி வைக்கிறார். 11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு ஒவ்வொரு வருடமும் அரசால் இலவச சைக்கிள் வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டு மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தை தமிழக முதலவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நாளை மறுநாள் தொடங்கி வைக்க உள்ளார். சென்னை மாநகராட்சி, நுங்கம்பாக்கம் ஆண்கள் பள்ளியில் இத்திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளார். முதல்கட்டமாக 6.5 லட்சம் மாணவர்களுக்கு இலவச […]
தமிழகத்தில் எது விலை ஏறினாலும் பாஜக தான் காரணம் என திமுக பேசுகிறது என வானதி சீனிவாசன் பேச்சு. மின்கட்டண உயர்வை கண்டித்து தமிழகத்தில் பல இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய வானதி சீனிவாசன், மின் கட்டண உயர்வால் சிறு, குறு தொழிற்சாலைகள் கடுமையான சூழலுக்கு தள்ளப்படுகின்றனர்; 100 யூனிட் இலவசமாக கொடுத்து ஏழை எளிய மக்களை ஏமாற்றுகிறார்கள் என தெரிவித்துள்ளார். மேலும், இந்தியாவிலிருந்து பிரித்து தனி தமிழ்நாடு வேண்டும் […]
சூரரைப் போற்று திரைப்படம் 5 தேசிய விருதுகளைக் குவித்துள்ளது பெருமையளிக்கிறது என கமலஹாசன் ட்வீட். சூரரைப் போற்று திரைப்படம் 5 தேசிய விருதுகளைக் குவித்துள்ளது. இந்த நிலையில், நடிகர் சூர்யாவிற்கு அரசியல் மற்றும் திரை பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமலஹாசன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘சூரரைப் போற்று திரைப்படம் 5 தேசிய விருதுகளைக் குவித்துள்ளது பெருமையளிக்கிறது. சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும், […]
அதிமுக அலுவலகம் சூறையாடப்பட்டு பொருட்களை எடுத்து சென்றது தொடர்பாக புகார் என சி.வி.சண்முகம் பேட்டி. சென்னை ராயப்பேட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம், அதிமுக தலைமை அலுவலகத்தின் பீரோவை உடைத்து, கட்சியின் தலைமை அலுவலக அசல் பத்திரம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம் உள்ளிட்டோர் மீது ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளோம். கோவை, புதுச்சேரி, திருச்சி அதிமுக அலுவலக இடத்திற்கான அசல் பத்திரங்களும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. அதிமுக பதிவு செய்யப்பட்டதற்கான சான்றிதழும் கொள்ளை, அண்ணா […]
இனி இது போன்ற சம்பவம் எந்த மாணவிக்கும் நிகழக்கூடாது என கள்ளக்குறிச்சி மாணவியின் தந்தை உருக்கம். கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவியின் உடல் பெற்றோரிடம் இன்று ஒப்படைக்கப்பட்டது. சொந்த ஊருக்கு மாணவின் உடல் கொண்டு செல்லப்பட்டு, கடலூர் பெரியநெசலூரில் உள்ள வீட்டில் மாணவியின் உடலுக்கு உள்ளூர் மக்கள், உறவினர்கள் மற்றும் அமைச்சர் என பலரும் இறுதி அஞ்சலி செலுத்தினர். பெரியநெசலூரில் மாணவியின் இறுதி ஊர்வலம் கிராம மக்களின் கண்ணீருடன் நடைபெற்றது. வெளியூர் ஆட்கள் அனுமதிக்கப்படாத நிலையில், பலத்த […]
இபிஎஸ் கோரிக்கையை நிராகரிக்க கோரி மக்களவை சபாநாயகருக்கு ஓபிஎஸ் கடிதம். நேற்று, ரவீந்திரநாத் அதிமுக எம்பி இல்லை, கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதால் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்தை அதிமுக எம்பியாக கருதக்கூடாது என மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியிருந்தார். இந்த நிலையில், அதிமுக-வில் இருந்து நீக்க கோரி ஓ.பி.ரவீந்திரநாத்துக்கு எதிராக எடப்பாடி கடிதம் எழுதிய நிலையில், இபிஎஸ் கோரிக்கையை நிராகரிக்க கோரி தற்போது ஓபிஎஸ் மக்களவைத் சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
வங்கி கணக்குகளை முடக்கக்கோரி ரிசர்வ் வங்கியின் சென்னை மண்டல இயக்குநருக்கு ஓபிஎஸ் கடிதம். அதிமுகவின் கரூர் வைஸ்யா, எஸ்பிஐ, இந்தியன் வங்கி உள்ளிட்ட 7 வங்கி கணக்குகளை முடக்க வேண்டும் என ரிசர்வ் வங்கியின் சென்னை மண்டல இயக்குநருக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார். அதில், அதிமுக பொதுக்குழு விவகாரம் குறித்து தேர்தல் ஆணையம் இறுதி முடிவு எடுக்கும்வரை வங்கி கணக்குகளை முடக்க வேண்டும். தேர்தல் ஆணையத்தின்படி, தற்போது வரை தாம் தான் அதிமுக ஒருங்கிணைப்பாளர் என ஓபிஎஸ் […]
ஓபிஎஸ், வைத்திலிங்கம் உள்ளிட்டோர் மீது ராயப்பேட்டை காவல் நிலையத்தில் அதிமுக நிர்வாகிகள் புகார். வட்டாட்சியர் தலைமையிலான அதிகாரிகளால் அதிமுக தலைமை அலுவலகத்தின் சீல் அகற்றப்பட்டு, அலுவலக மேலாளர்கள் மகாலிங்கம், மனோகரனிடம் சாவி ஒப்படைக்கப்பட்டது. அதிமுக அலுவலகம் மீண்டும் திறக்கப்பட நிலையில் இபிஎஸ் தரப்பினர் அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டனர். இந்த நிலையில், அதிமுக அலுவலகத்தில் இருந்த விலை உயர்ந்த பரிசுப்பொருட்கள் காணவில்லை என ஈபிஎஸ் தரப்பு குற்றம்சாட்டியிருந்தது. அதன்படி, அதிமுக அலுவலகத்தில் 3வது மாடியில் இருந்த மறைந்த முன்னாள் முதலமைச்சர் […]
பெரியநெசலூர் மயானத்தில் மாணவியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. கடந்த 13-ஆம் தேதி தனியார் பள்ளியில் உயிரிழந்த நிலையில், 11 நாட்களுக்கு பின் கள்ளக்குறிச்சி மாணவியின் உடல் பெற்றோரிடம் இன்று ஒப்படைக்கப்பட்டது. சொந்த ஊருக்கு மாணவின் உடல் கொண்டு செல்லப்பட்டு, கடலூர் பெரியநெசலூர் வீட்டில் வைக்கப்பட்டிருந்த மாணவியின் உடலுக்கு உள்ளூர் மக்கள், உறவினர்கள் மற்றும் அமைச்சர் என பலரும் கண்ணீர் மல்க இறுதி அஞ்சலி செலுத்தினர். மாணவியின் இறுதிச் சடங்கு நடைபெறும் வேப்பூர் பெரியநெசலூர் கிராமம், போலீஸார் கட்டுப்பாட்டில் […]
ஒருவர் கூட தமிழர் இல்லை.. இதுதான் “திராவிடம்” சனாதனம் பேசுபவர்கள் அறிய வேண்டும் என பீட்டர் அல்போன்ஸ் ட்வீட். டைம்ஸ் ஆஃப் இந்தியா, ₹2.4 லட்சம் கோடி, அரசு வங்கிகளில் கடன் வாங்கி, ஆட்டையைப்போட்டு மோசடி செய்த 16 முக்கிய குற்றவாளிகள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து பீட்டர் அல்போன்ஸ் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘₹2.4 லட்சம் கோடி, அரசு வங்கிகளில் கடன் வாங்கி, ஆட்டையைப்போட்டு மோசடி செய்த 16 முக்கிய குற்றவாளிகள் பட்டியலை இன்றைய டைம்ஸ் […]
செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழாவை முன்னிட்டு 4 மாவட்டங்களுக்கு ஜூலை 28 உள்ளூர் விடுமுறை அறிவிப்பு. சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் வரும் 28-ம் தேதி முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது. செஸ் ஒலிம்பியாட் போட்டிகளின் தொடக்க விழா மற்றும் நிறைவு விழா நிகழ்ச்சிகள் சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளன. செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்கான ஏற்பாடுகள் மாமல்லபுரத்தில் ஒருபுறம் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், தொடக்க விழா […]
அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திரௌபதி முர்முவுக்கு நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியாவின் 14வது குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் பதவிக்காலம் நாளையுடன் முடிவடைய உள்ள நிலையில், 15வது குடியரசு தலைவரை தேர்ந்தெடுக்கும் தேர்தல் கடந்த (ஜூலை) 18ஆம் தேதி நடைபெற்றது. இந்த நிலையில், குடியரசு தலைவர் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்தியாவின் 15வது குடியரசு தலைவர் பதவிக்கு பாஜக கூட்டணி சார்பில் போட்டியிட்ட திரௌபதி முர்மு […]
தனியார் பள்ளி மாணவியின் இறுதி ஊர்வலம் கிராம மக்களின் கண்ணீருடன் தொடங்கிது. சென்னை உயர் நீதிமன்ற அறிவுறுத்தலின்படி, மாணவியின் உடலை, பெற்றோர் இன்று பெற்றுக்கொண்டனர். கடந்த 13-ஆம் தேதி தனியார் பள்ளியில் உயிரிழந்த நிலையில், 11 நாட்களுக்கு பின் கள்ளக்குறிச்சி மாணவியின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதன்பின் மாணவியின் உடல் ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது. கடலூர் பெரியநெசலூர் வீட்டில் வைக்கப்பட்டிருந்த மாணவியின் உடலுக்கு உள்ளூர் மக்கள், உறவினர்கள் மற்றும் அமைச்சர் என பலரும் […]
சர்வதேச சந்தை நிலவரத்தை படி கச்சா எண்ணெய் விலையை அடிப்படையாக கொண்டு பெட்ரோல்,டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கின்றன . இந்த நிலையில்,63-வது நாளாக பெட்ரோல்,டீசல் விலையில் எந்த மாற்றமும் இன்றி அதே விலையில் தொடர்கிறது. சென்னையில் இன்று(ஜூலை 23) பெட்ரோல் 1லிட்டர் ரூ.102.63க்கும், டீசல் 1லிட்டர் ரூ.94.24க்கும் விலை மாற்றம் இல்லாமல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சென்னையில், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.16 உயர்ந்து, ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,696-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலையில், ஏற்றம், இறக்கம் காணப்படுவதுண்டு. அந்த வகையில், இன்றும் தங்கம் விலை அதிகரித்துள்ளது. அதன்படி, சென்னையில், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.16 உயர்ந்து, ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,696-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.128 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.37,568-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் […]