உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு முதலமைச்சர் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம், நரசோதிப்பட்டியில் நேற்று மின்கசிவினால் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த சேட்டு என்பவரின் மகன் கார்த்திக், அன்பழகன் என்பவரின் மனைவி புஷ்பா, கார்த்திக் என்பவரின் மனைவி மகேஸ்வரி, மகன்கள் சர்வேஷ் மற்றும் முகேஷ் ஆகிய ஐந்து நபர்கள் பலத்த தீக்காயமடைந்தனர், மேலும் சிகிச்சைகாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள பதிவில் அவர் கூறியது “சேலம் மாவட்டம், நரசோதிப்பட்டியில் நேற்று மின்கசிவினால் ஏற்பட்ட தீ விபத்தில் திருமதி. புஷ்பா,திரு.கார்த்திக், திரு.மகேஸ்வரி, திரு.சர்வேஷ் மற்றும் திரு.முகேஷ் ஆகிய ஐந்து நபர்கள் தீக்காயமடைந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர் என்ற செய்தி அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன் என்று பதிவிட்டுள்ளார்.
unknown node