தூத்துக்குடியில் உள்ள பனிமய மாதா கோவில் திருவிழா, இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
உலகப்புகழ் பெற்ற தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலய கோவிலின் 438-வது திருவிழா, ஜூலை 26-ம் தேதி முதல் ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி வரை நடைபெற உள்ளது. ஆனால், தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து கொண்டே வரும் நிலையில், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்காரணமாக, தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலய விழா தொடர்பாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி சில கட்டுப்பாடுகளை விதித்தார். மேலும் இன்று முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், தூத்துக்குடி தூய பனிமய மாதா கொடியேற்ற விழா நிகழ்ச்சியில் பங்குதந்தையர்கள் 15 பேர் மட்டுமே பங்கேற்பார்கள் என மாவட்ட ஆட்சியர் அறிவித்தார்.
அதன்படி, இன்று காலை பனிமய மாதா கோவிலில் ஊரடங்கு காரணமாக மக்கள் பங்கேற்பின்றி திருப்பலி நடைபெற்றது. அதனைதொடர்ந்து, தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் மேதரு A.ஸ்டீபன் அவர்களால் கொடியேற்றப்பட்டது. மேலும் கொடியேற்றத்தை தொடர்ந்து, பத்து நாட்களும் சிறப்பு திருப்பலிகள், உள்ளிட்ட அனைத்து நிகழ்வுகளும் இணையதளம் வாயிலாக மக்களுக்கு நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
சென்னை : நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி, ‘பீனிக்ஸ்’ திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஏற்கனவே, இந்த…
டெல்லி : 2024 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி கோப்பையை வென்றது இன்னும் ஒரு மறக்க முடியாத…
கடலூர் : மாவட்டம் சிதம்பரத்தில் அதிர்ச்சியடைய வைக்கும் வகையில் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மடப்புரம் பகுதியில் தன்னுடைய குடும்பத்துடன் அர்ஜுனன் என்ற…
மத்தியப் பிரதேசம் : மாநிலத்தின் முதல்வர் கான்வாயில் இருந்த வாகனங்கள், ஜூன் 26, 2025 அன்று ரத்லம் மாவட்டத்தில் நடுவழியில்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமடைந்து அடுத்தகட்டமாக இந்த…
ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டு நாட்டிற்கும் இடையே எழுந்த போரின் காரணமாக பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. அந்த பதற்றத்தை…