திருவண்ணாமலை மாவட்டத்தை சார்ந்த வெறையூர் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் இவர் தச்சம்பட்டு காவல் நிலையத்தில் காவலராக வேலை செய்து வருகிறார். இவருக்கு கடந்த ஆண்டு விழுப்புரம் மாவட்டம் மணலூர்பேட்டை சார்ந்த விமலா என்பவரை திருமணம் செய்துள்ளார்.
இந்நிலையில் மணிகண்டனுக்கு , ஒரு மைனர் பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இது விமலாவுக்கு தெரியவர இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து விமாலா இரண்டு வாரங்களுக்கு முன் திருவண்ணாமலையில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
தன் கணவர் ஒரு மைனர் பெண்ணுடன் தொடர்பு வைத்துள்ளதாகவும், தற்போது அந்தப் பெண் 8 மாத கர்ப்பமாக இருப்பதாக கூறியுள்ளார் இதையடுத்து புகாரின்பேரில் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். ஒரு காவலரை கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…