இந்தியாவை நம்பர் 1 நாடாக்க பிரதமர் மோடி இலக்கு – ஆளுநர் ஆர்என் ரவி

இந்தியாவின் ஆன்மீக தலைநகரம் தமிழ்நாடு தான் என ஆளுநர் ஆர்என்.ரவி பேச்சு.
சென்னை எம்ஆர்சி நகரில் மீன்வளத்துறை குறித்த கருத்தரங்கு நடைபெற்றது. இந்த நிகழ்வில் மத்திய மீன் வளத்துறை அமைச்சர், தமிழக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதில் பங்கேற்று பேசிய தமிழக ஆளுநர் ஆர்என் ரவி, இந்தியாவை உலகில் முதன்மை நாடாக்க மத்திய அரசு செயல்பட்டு வருகிறது என்றும் இதற்காக அடுத்த 25 ஆண்டுகளுக்கான செயல்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.
இந்தியா ஒரு இலக்கோடு செயல்பட்டு வருகிறது. உலகின் முதன்மையான நாடாக இந்தியாவை மாற்றுவது தான் நமது இலக்கு. உலகின் முதன்மை நாடாக மாற்றுவதற்கான அனைத்து தகுதிகளையும் இந்தியா பெற்றுள்ளது. கடந்த காலங்களை போல இல்லாமல் இப்போது வளர்ச்சி வேகமாக உள்ளது. ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற முழக்கத்துடன் நாட்டை முதலிடத்திற்கு கொண்டு செல்ல பிரதமர் மோடி உழைத்து வருகிறார் என தெரிவித்த ஆளுநர், இந்தியாவில் ஆன்மிக தலைநகரமாக தமிழகம் திகழ்கிறது என்றும் புகழாரம் சூட்டினார்.
லேட்டஸ்ட் செய்திகள்
போர் நிறுத்தத்தை மீறிய ஈரான்.., ‘தெஹ்ரானை நடுங்க செய்யும் இஸ்ரேல்’ – பறந்தது உத்தரவு.!
June 24, 2025
போர் நிறுத்தம் அமல்: ‘தயவுசெய்து சண்டை நிறுத்தத்தை மீறாதீர்கள்’ – அதிபர் டிரம்ப் வேண்டுகோள்.!
June 24, 2025
போர் நிறுத்த உடன்படிக்கைக்கு ஒப்புதல்: ‘மீறினால் பதில் தாக்குதல் நடத்தப்படும்’ – இஸ்ரேல் அறிவிப்பு.!
June 24, 2025
‘இஸ்ரேல் உடனான போர் நிறுத்தம்’ – ஈரான் ஊடகம் அறிவிப்பு.!
June 24, 2025