கடந்த சில நாட்களுக்கு முன் துக்ளக் விழாவில் ரஜினிகாந்த் பேசுகையில், 1971-ஆம் ஆண்டு பெரியார் நடத்திய ஊரணியில் ராமர் மற்றும் சீதையின் சிலைகளை உடை இல்லாமல் எடுத்துச் சென்றனர்.ராமர் சிலைக்கு செருப்புக்கு மாலை அணிவிக்கப்பட்டது.இந்த செய்தியை துக்ளக் நாளிதழ் மட்டுமே வெளியிட்டது என்று ரஜினி பேசினார்.ரஜினிகாந்த் இவ்வாறு பேசியது முதல் அவருக்கு தமிழகத்தில் பெரும்பாலான கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றது.
ரஜினிக்கு எதிராக பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. ஆனால் ரஜினி இது குறித்து கூறுகையில்,நான் பேசியதற்கு மன்னிப்பு கேட்க முடியாது என்றும் வருத்தம் தெரிவிக்க முடியாது என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார். அதிலும் குறிப்பாக outlook india என்ற பத்திரிக்கையில் இருந்து இந்த செய்தியை இருந்ததாக ரஜினிகாந்த் கூறினார்.
இந்நிலையில் ரஜினி கருத்து குறித்து முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ. பழ.கருப்பையா கூறுகையில், நாட்டுக்காக உழைத்தவர்கள் பற்றி கருத்து தெரிவிக்கும் போது அவர்கள் பற்றி முழுமையாக அறிந்து கொண்டே கருத்துக்களை தெரிவிக்க வேண்டும்.ஆனால் கொள்கையில் மாற்றுக் கருத்து இருந்தால் மக்கள் மனது புண்படாத வகையில் கூற வேண்டும். பெரியார் குறித்து நடிகர் ரஜினிகாந்த் கூறி தமிழக மக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய நிலையில் இல்லை. பெரியாரின் புகழை மறைக்க எத்தனை ரஜினிகள் வந்தாலும் முடியாது என்று தெரிவித்தார்.
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…