நியாயமான கோரிக்கைகள் தி.மு.க அரசு அமைந்தவுடன் நிறைவேற்றப்படும் -மு.க.ஸ்டாலின்

Default Image

ஆசிரியர்கள் – அரசு ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகள் தி.மு.க அரசு அமைந்தவுடன் நிறைவேற்றப்படும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், நியாயமான கோரிக்கைகளுக்காக நடத்தப்பட்ட ஜாக்டோ – ஜியே அமைப்பினரின் போராட்டத்தைக் கொச்சைப்படுத்திய அதிமுக ஆட்சி 5068 ஆசிரியர்கள் – அரசு ஊழியர்களுக்கு 17(பி)-யின் கீ குற்றக் குறிப்பாணைகள் வழங்கி போரின்னலுக்கு உள்ளாக்குவது கண்டனத்திற்குரியது.போராட்டத்தை திரும்பப் பெற முதலமைச்சரே வேண்டுகோள் விடுத்து – பிறகு ஒழுங்கு நடவடிக்கையும் எடுத்திருப்பது வஞ்சகமான அணுகுமுறை.

ரகசியக் குறிப்பேடு நீக்கம், குடும்பங்களுக்கு பாதுகாப்பு நிதி, கருணை அடிப்படையில் வேலை, ஈட்டிய விடுப்பை சரண் செய்தால் பணம், திருமணம் – வாகனம் – வீடு கட்டக் கடன், மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான சம்பளம், சத்துணவுப் பணியாளர்களுக்கு கால முறை ஊதியம், சாலைப்பணியாளர் – மக்கள் நலப்பணியாளர் நியமனம் கலந்தாய்வு மூலம் பணி மாறுதல், ஆசிரியர் நியமனம் என திமுக ஆட்சிதான் ஆசிரியர்கள் – அரசு ஊழியர்கள் வாழ்வில் ஒளியேற்றி உயர்வு தந்தது.

அதிமுக ஆட்சி, நள்ளிரவில் கைது செய்து – ஒரே நாளில் லட்சக்கணக்கானவர்களை டிஸ்மிஸ் செய்த போது அரணாக அன்றும் இன்றும் நிற்கிறது திமுக.அரசு ஊழியர்கள் – ஆசிரியர்கள் மீதான துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கையை திரும்பப் பெற வேண்டும். மக்களின் பேராதரவுடன் திமுக ஆட்சி அமைந்ததும் அவர்களின் நியாயமான கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றிட நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 05052025
Kahmir person jumped into river and died
DMK MP A Rasa stage collapse
NEET exam 2025
India Pakistan - Postal Services