எச்சரிக்கை: தமிழகத்திற்கு டிசம்பர் 2-ஆம் தேதி ரெட் அலர்ட்.!

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியால் டிச.2-ந்தேதி தமிழகத்தில் அதி கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
வருகின்ற டிசம்பர் 2ம் தேதி தமிழகம் மற்றும் கேரளாவில் அதி கனமழைக்கு வாய்ப்பு என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
நேற்று வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாவதில் தாமதமாகும் என்றும் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற 36 மணி நேரமாகும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இந்த தாழ்வு மண்டலம் வலுவடைந்து வருகின்ற டிசம்பர் 2-ம் தேதி தென் தமிழக கடற்கரையை நெருங்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனால், தமிழகம் மற்றும் கேரளாவில் டிச.2-ல் அதிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இதனால், டிசம்பர் 2ஆம் தேதி வடதமிழகத்தில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு என்பதால் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
”பட்டாசு விபத்தில் பலியானவர்களுக்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும்” – மதுரை கிளை உத்தரவு.!
June 20, 2025
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: இங்கிலாந்து அணி பந்து வீச்சு.., சாய் சுதர்சன் அறிமுகம்.!
June 20, 2025