மாற்றுத்திறனாளிகளுக்கு நிவாரண உதவி – தமிழக அரசுக்கு, உயர்நீதிமன்றம் உத்தரவு!!

Published by
பாலா கலியமூர்த்தி

வாழ்வாதாரம் இழந்த மாற்றுத்திறனாளிகளுக்கு நிவாரண உதவிகளை வழங்கக்கோரிய வழக்கில் உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. 

கொரோனா ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் இழந்த மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய நிவாரண உதவிகளை வழங்கக் கோரி மூன்று அமைப்புகளின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1,000 மட்டும் நிவாரண உதவி வழங்கப்படும்என்றும் கூடுதல் தொகை வழங்குவதாக எந்த உறுதியும் அளிக்கவில்லை எனவும் மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், அரசு அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா நிவாரண தொகையாக ரூ.133 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில், 6 லட்சத்து 94 ஆயிரம் பேருக்கு, 64 கோடியே 42 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. மிதமுள்ளவர்களுக்கு நிவாரண உதவி வழங்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் வாதிட்டார்.

இதனைத்தொடர்ந்து, தமிழக அரசு ஒதுக்கப்பட்ட ரூ.133 கோடியில், ரூ.64.42 கோடி தரப்பட்ட நிலையி,ல் மீதமுள்ள ரூ.73 கோடி நிலை என்ன? என்பது குறித்து விளக்கமளிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற உத்தரவு பிறப்பித்து வழக்கை அடுத்த வாரத்துக்குத் தள்ளிவைத்தனர். மேலும், மாற்றுத்திறனாளிகள் கொரோனா நிவாரண உதவிக்கு ஒதுக்கிய தொகை பயனாளிகளுக்கு வழங்கப்பட்டதா என்றும் கேள்வி எழுப்பியுள்ளது என்பது குறிப்பிடப்படுகிறது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

3 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

4 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

5 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

5 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

7 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

9 hours ago