ரிதன்யா தற்கொலை : ஜாமின் மனு மீதான விசாரணை 7 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!

ரிதன்யா தற்கொலை வழக்கில் கைதான கணவர், மாமனார் ஜாமின் கோரிய மனுவுக்கு எதிராக ரிதன்யாவின் பெற்றோர் தாக்கல் செய்த இடையீட்டு மனு விசாரணையில்,கால அவகாசம் கேட்டதால், விசாரணை வரும் 7ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Rithanya Case

திருப்பூர் :  மாவட்டம், அவிநாசி அருகே கைகாட்டிபுதூர் பகுதியைச் சேர்ந்த ரிதன்யா (வயது 27), வரதட்சணை கொடுமை காரணமாக ஜூன் 28, 2025 அன்று பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பேசுபொருளாக வெடித்துள்ளது. தற்கொலை செய்துகொள்வதற்கு முன் அவர் பேசிவிட்டு சென்ற அந்த ஆடியோ இன்னும் தீராத ஒரு சோகமான விஷயமாக இருந்து வருகிறது.

மேலும், இந்த சம்பவம் வரதட்சணை கொடுமைக்கு எதிரான விழிப்புணர்வை மீண்டும் வலியுறுத்தியது. ரிதன்யாவின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், அவரது கணவர் கவின்குமார் (வயது 28) மற்றும் மாமனார் ஈஸ்வரமூர்த்தி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, இருவரும் கைது செய்யப்பட்டு திருப்பூர் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து, இந்த வழக்கில், கவின்குமார் மற்றும் ஈஸ்வரமூர்த்தி ஆகியோர் திருப்பூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்தனர். அவர்கள் தரப்பில், ரிதன்யாவின் மரணத்திற்கு வரதட்சணை தொடர்பில்லை என்றும், அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் தவறானவை என்றும் வாதிடப்பட்டது.

ஆனால், ரிதன்யாவின் பெற்றோர் இந்த ஜாமின் மனுவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து, இடையீட்டு மனு ஒன்றை தாக்கல் செய்தனர். இதனால், இந்த வழக்கு தொடர்பான மனு மீதான விசாரணை ஜூலை 7-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ரிதன்யாவின் பெற்றோரின் புகாரின்படி, கவின்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர், திருமணத்திற்கு பிறகு ரிதன்யாவிடம் தொடர்ந்து வரதட்சணை கோரி மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் துன்புறுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இந்த கொடுமைகளால் மனமுடைந்த ரிதன்யா, தற்கொலை செய்து கொண்டதாக அவர்கள் கூறியுள்ளனர். இந்த வழக்கு, இந்தியாவில் வரதட்சணை தொடர்பான சட்டங்களை கடுமையாக்க வேண்டியதன் அவசியத்தை மீண்டும் எடுத்துக்காட்டியுள்ளது.இந்த வழக்கு, திருப்பூர் மாவட்டத்தில் மட்டுமல்லாமல், தமிழகம் முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ளது.

பெண்களுக்கு எதிரான வன்முறை மற்றும் வரதட்சணை பிரச்சினைகளுக்கு எதிராக போராடும் அமைப்புகள், இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று கோரி வருகின்றன. ஜூலை 7-ஆம் தேதி நடைபெறவுள்ள விசாரணையில், ஜாமின் மனு மீதான முடிவு மற்றும் ரிதன்யாவின் மரணத்திற்கு நீதி கிடைப்பது குறித்து மேலும் தெளிவாக தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tvk manimaran
Harry Brook - Jamie Smith
vijay - chennai hc
Dog Bite Rabies
Nikitha
TVK Vijay