#BREAKING: நாட்டுப்புற கலைஞர்களுக்கு ரூ.2000.., அரசாணை வெளியீடு..!

புதியதாக பதிவு செய்துள்ள தவில், நாதஸ்வரம் மற்றும் தெருக்கூத்து உள்ளிட்ட கலைஞர்களுக்கு தலா ரூ.2000 சிறப்பு நிவாரண நிதி வழங்க அரசாணை வெளியீடு

புதியதாக பதிவு செய்துள்ள தவில், நாதஸ்வரம் மற்றும் தெருக்கூத்து உள்ளிட்ட கலைஞர்களுக்கு தலா ரூ.2000 சிறப்பு நிவாரண நிதி வழங்க அரசாணை வெளியீடு

தமிழகத்தில் நாட்டுப்புற கலைஞர்களுக்கு ரூ.2000 சிறப்பு நிவாரண நிதியை வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. உயர்நீதிமன்ற அறிவுறுத்தலின் பேரில் நல வாரியத்தில் புதிதாக பதிவு செய்தவர்களுக்கு ரூ.2000 தர அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

unknown node

6810 கலைஞர்களுக்கு தலா ரூ.2000 வீதம் வழங்க ரூ. 1.36 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  தமிழக அரசு நலவாரியத்தில் புதியதாக பதிவு செய்த தவில், நாதஸ்வரம், தெருக்கூத்து உள்ளிட்ட நாட்டுப்புற கலைஞர்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.