சசிகலா சுய நினைவுடன் இருக்கிறார் – மருத்துவமனை அறிக்கை.!

பெங்களூரில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சசிகலாவின் உடல்நிலை சீராக உள்ளது என மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
உடல்நலக்குறைவால் பெங்களூரில் உள்ள விக்டோரியா மருத்துவ கல்லுரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு கொரோனா மற்றும் நிமோனியா காய்ச்சல் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருந்தது. 98-ஆக இருந்த ஆக்சிஜன் அளவு 95-ஆக குறைந்து இருப்பதாக கூறப்பட்டது.
மேலும், சசிகலாவுக்கு ரத்த அழுத்தம், நீரிழவு, தைராய்டு போன்ற பிரச்னைகளும் இருப்பதால், தீவிர கண்காணிப்பில் உள்ளார் என்றும் தெரிவித்தனர். இந்நிலையில் தற்போது சசிகலா உடல்நிலை குறித்து விக்டோரியா மருத்துவ கல்லுரி மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், சசிகலா உடல்நிலையில் சீராக நல்ல முன்னேற்றம் உள்ளது என்றும் சுய நினைவுடன் நன்றாக இருக்கிறார் எனவும் தெரிவித்துள்ளது. ஆக்சிஜன் அளவு காலையில் இருந்ததைவிட தற்போது 98-ஆக அதிகரித்துள்ளது என அறிக்கையில் கூறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
போர் நிறுத்தத்தை மீறிய ஈரான்.., ‘தெஹ்ரானை நடுங்க செய்யும் இஸ்ரேல்’ – பறந்தது உத்தரவு.!
June 24, 2025
போர் நிறுத்தம் அமல்: ‘தயவுசெய்து சண்டை நிறுத்தத்தை மீறாதீர்கள்’ – அதிபர் டிரம்ப் வேண்டுகோள்.!
June 24, 2025
போர் நிறுத்த உடன்படிக்கைக்கு ஒப்புதல்: ‘மீறினால் பதில் தாக்குதல் நடத்தப்படும்’ – இஸ்ரேல் அறிவிப்பு.!
June 24, 2025
‘இஸ்ரேல் உடனான போர் நிறுத்தம்’ – ஈரான் ஊடகம் அறிவிப்பு.!
June 24, 2025