சென்னையில் பள்ளி வேன் மோதி மாணவர் உயிரிழந்த நிலையில், பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனை.
சென்னை வளசரவாக்கம் ஆழ்வார் திருநகரில் உள்ள தனியார் பள்ளி வேன் மோதி 2-ஆம் வகுப்பு படித்து வந்த 7 வயது மாணவன் உயிரிழந்த சம்பவம், பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக பள்ளி தாளாளர், முதல்வர் மற்றும் பேருந்திலிருந்து இறங்கிவிடும் ஊழியர் ஆகியோர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதில், பள்ளி வேன் ஓட்டுநர் மற்றும் பள்ளி ஊழியர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில், 2-ஆம் வகுப்பு மாணவர் வேன் மோதி உயிரிழந்த நிலையில், பள்ளி வாகனம் பாதுகாப்பு குறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் அவசர ஆலோசனை நடத்தி வருகின்றனர். சென்னை தலைமை செயலகத்தில் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் காகர்லா உஷா தலைமையில் அதிகாரிகள் ஆலோசனை நடத்துகின்றனர்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார், மெட்ரிக் பள்ளிகளின் இயக்குனர் கருப்பசாமி உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். பள்ளி வாகனங்களின் இயக்கத்தை ஏற்கனவே உள்ள நடைமுறைகளின் படி கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனிடையே, பள்ளி வேன் மோதி மாணவன் பலியான விவகாரத்தில் தனியார் பள்ளிக்கு முதன்மை கல்வி அலுவலர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில் அடுத்த 24 மணி நேரத்துக்குள் 6 கேள்விகளுக்கு பதில் அளிக்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
லீட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. தொடக்க வீரர்கள் ஜாக் கிராவ்லி (65) மற்றும்…
லீட்ஸ் : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஈரான்-இஸ்ரேல் மோதலால் பதற்றமான சூழலில் சிக்கித் தவிக்கும் தமிழக மீனவர்களை பாதுகாப்பாக மீட்க வேண்டுமென…
லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் ஐந்தாவது நாளில், விறுவிறுப்பான தருணத்தில் மழை…
வாஷிங்டன் : இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றம் என்பது உச்சத்தில் இருக்கும் சூழலில், ஜூன் 24 அதிகாலை, ஈரானிலிருந்து இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள்…
சென்னை : நடிகர் ஸ்ரீகாந்த் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில், நடிகர் கிருஷ்ணாவுக்கும் இந்த வழக்கில் தொடர்பு…