சிறப்பு நீதிமன்றத்தில் இன்று ஆஜராகிறார் செந்தில் பாலாஜி!

Senthil balaji case hc

சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன் (ஆகஸ்ட் 28) நிறைவடைய உள்ளதால், எம்.பி – எம்.எல்.ஏ.-களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் இன்று அவர் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

முன்னதாக, புழல் சிறையில் இருந்து அமைச்சர் செந்தில் பாலாஜி காணொளி வாயிலாக எம்.பி – எம்.எல்.ஏ.-களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரானார். அப்போது, இவரது நீதிமன்ற காவல் ஆகஸ்ட் 25ல் முடிவதாக இருந்த நிலையில், நீதிபதி அல்லி நீதிமன்ற காவலை நீடித்து சிறப்பு நீதிமன்ற பொறுப்பு நீதிபதி சிவகுமார் உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில், இன்றுடன் நீதிமன்ற காவல் முடிவடைய உள்ள நிலையில், இன்று அமைச்சர் செந்தில் பாலாஜி நேரில் ஆஜர்படுத்தப்படுவார் என தெரிகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

eps - mk stalin
DMK - Ajithkumar
Ajith Kumar TN Govt
elon musk vs Trump
Ajith Kumar Case - Siva Gangai