செந்தில் பாலாஜி விவகாரம்: இன்று டெல்லி செல்கிறார் ஆளுநர்.!

அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீக்கத்தை நிறுத்தி வைத்திருக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று டெல்லி செல்கிறார்.

Governor Petition

அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீக்கத்தை நிறுத்தி வைத்திருக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று டெல்லி செல்கிறார்.

செந்தில் பாலாஜி டிமிஸ் ஆர்டர் இன்று வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், செந்தில் பாலாஜி விவகாரம் குறித்து டெல்லியில் வல்லுனர்களுடன் அவர் ஆலோசனை செய்வார் என்று சொல்லப்படுகிறது.

அதோடு அமித்ஷா உள்ளிட்ட மத்திய அமைச்சர்களையும் சந்தித்து பேசவுள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக, இன்று டெல்லி செல்லும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, ஜூலை 13 ஆம் தேதி வரை தலைநகரிலேயே தங்க திட்டமிடப்பட்டுள்ளது.