சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர்.!

திருச்செந்தூரில் அமைக்கப்பட்டுள்ள டாக்டர் சிவந்தி ஆதித்தனாரின் மணிமண்டபத்தை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். பத்திரிகை, கல்வி, இலக்கியம்

வீரபாண்டிய பட்டணத்தில் உள்ள அரசு ஐ.டி.ஐ. வளாகத்தில் சிவந்தி ஆதித்தனாரின் மணிமண்டபத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திறந்து வைத்தார்.

திருச்செந்தூரில் அமைக்கப்பட்டுள்ள டாக்டர் சிவந்தி ஆதித்தனாரின் மணிமண்டபத்தை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். பத்திரிகை, கல்வி, இலக்கியம் போன்றவைகளில் சிறந்த சேவை ஆற்றிய மறைந்த சிவந்தி ஆதித்தனாருக்கு, திருச்செந்தூர் வீரபாண்டிய பட்டணத்தில் உள்ள அரசு ஐ.டி.ஐ. வளாகத்தில், ரூ.1 கோடியே 34 லட்சம் மதிப்பில் தமிழக அரசு சார்பில் மணிமண்டபம் அமைக்கப்பட்டது. இந்த மணிமண்டபத்தில் சிவந்தி ஆதித்தனாரின் முழு உருவ வெண்கலச்சிலை மற்றும் நூலகம் உள்ளிட்ட வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

unknown node

இந்நிலையில், திறப்பு விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு, மணிமண்டபத்தையும், சிவந்தி ஆதித்தனாரின் சிலையையும் திறந்து வைத்தார். அவரது சிலைக்கு முதல்வர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்த மணிமண்டபத்தில் நூலகம் மற்றும் பூங்காவும் அமைந்துள்ளது. அங்குள்ள நூலகத்திற்கு சென்று முதல்வரும், துணை முதலவரும் பார்வையிட்டனர். இந்த நிகழ்ச்சியில் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் உள்ளிட்ட அதிமுக பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.