தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு… மாணவர்களுக்காக சிறப்பு பெருந்துகள் இயக்கம்.!

school reopens

 தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பின் ஊர் திரும்பும் மாணவர்கள் வசதிக்காக 3 நாட்கள் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. 

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து வரும் ஜூன் 12 திங்கள் கிழமை அன்று திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்து இருந்தது. ஏற்கனவே 2 முறை பள்ளிகள் திறப்பு மாற்றியமைக்கப்பட்டு இறுதியாக வரும் 12ஆம் தேதி உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து, கோடை விடுமுறைக்கு வெளியூர் சென்று மீண்டும் வீடு திரும்ப உள்ள பள்ளிமாணவர்களுக்கு எதுவாக இன்று (ஜூன் 9) , நாளை (ஜூன் 10), நாளை மறுநாள் (ஜூன் 11) என வெள்ளி , சனி, ஞாயிறு ஆகிய தினங்களில் தமிழகத்தின் பல்வேறு முக்கிய பகுதிகளுக்கு சிறப்பு பேருந்து இயக்கப்பட உள்ளது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சென்னைக்கு சுமார் 650 பேருந்துகளும், சென்னையில் இருந்து மதுரை,  திருச்சி, கோவை,  தஞ்சாவூர், நெல்லை உள்ளிட்டட் முக்கிய நகரங்களுக்கு சுமார் 850 பேருந்துகளும் என மொத்தமாக 1500க்கும் மேற்பட்ட பேருந்துகள் இந்த மூன்று நாளில் இயக்கப்பட உள்ளது என அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் அறிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்