காவலர் ரேவதியை தொடர்ந்து சாட்சியாக மாறும் சிறப்பு எஸ்.ஐ.பால்துரை மற்றும் காவலர் முத்துராஜ்.
சிபிசிஐடி போலீசார் நேற்று காலை தந்தை, மகன் வழக்கு தொடர்பான விசாரணையை தொடங்கியது. சிபிசிஐடி போலீசார் நேற்று முதல் ஜெயராஜ் வீடு, கடை மற்றும் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தொடர்ந்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையை தொடர்ந்து இரவு போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதனையடுத்து, தந்தை, மகன் கொலை வழக்கில் இதுவரை 5 போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமை காவலர் ரேவதி, இந்த சம்பவம் குறித்து சாட்சி கூறியுள்ள நிலையில், சாத்தான்குளம் சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் பால்துரை, காவலர் முத்துராஜ் ஆகியோர் சாட்சியாக மாற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிறப்பு எஸ்.ஐ பால்துரை, சம்பவத்தை நேரில் பார்த்தவராக சாட்சியம் அளிக்க உள்ளதால், அவர் கைது செய்யப்படவில்லை என்றும், இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக கருதப்படும் காவலர் முத்துராஜ் அப்ரூவராக மாறினாலும், அவர் கைது செய்யப்படுவார் என்றும் சிபிசிஐடி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை : தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கிக்கொண்டு இருக்கும் சூழலில், தேர்தலில் பங்கேற்கும் அரசியல் கட்சிகள் அனைத்தும் தேர்தலுக்கான வேளைகளில்…
கேன்டர்பரி : இந்திய கிரிக்கெட் வீரர் கருண் நாயர் இளம் கிரிக்கெட் வீரர்கள் கிடைத்த வாய்ப்புகள் எப்படி பயன்படுத்தவேண்டும் என்கிற அளவுக்கு…
சென்னை : பாமக நிறுவனர் ராமதாஸூக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு பெரிய அளவில் பேசுபொருளாக…
சென்னை : தமிழ் திரையுலகின் மூத்த நடிகர் ராஜேஷ், தனது 75-ஆவது வயதில் சென்னையில் மாரடைப்பால் காலமானார். இவருடைய மறைவு சினிமா…
பெங்களூர் : ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணி இதுவரை ஐபிஎல் பட்டத்தை வெல்லவில்லை என்றாலும், 2025ஆம் ஆண்டு அவர்களுக்கு…
மத்திய பிரதேசம் : இந்தியா vs பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. இந்த போரில்…