இலங்கை மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை அனுப்பிய தமிழக அரசு..

இலங்கை மக்களுக்காக இந்திய அரசும் மக்களும் ஒன்றிணைந்துள்ளனர். 40,000 மெட்ரிக் டன் அரிசி, 500 மெட்ரிக் டன் பால் பவுடர், 100 மெட்ரிக் டன் மருந்துகள் உள்ளிட்ட

unknown node

இலங்கை மக்களுக்காக இந்திய அரசும் மக்களும் ஒன்றிணைந்துள்ளனர். 40,000 மெட்ரிக் டன் அரிசி, 500 மெட்ரிக் டன் பால் பவுடர், 100 மெட்ரிக் டன் மருந்துகள் உள்ளிட்ட பொருட்களை தமிழக அரசு நன்கொடையாக இலங்கை அரசுக்கு இன்று வழங்கியது. இலங்கை மக்களுக்கு இதுபோன்ற அத்தியாவசிய பொருட்களை தமிழக அரசு முன்பு இரண்டு முறை அனுப்பியுள்ளது. இது மூன்றாவது முறையாகும்.

உணவு, எரிபொருள் மற்றும் அத்தியாவசிய மருந்துகள் போன்ற அடிப்படைத் தேவைகளை சமாளிக்க இலங்கைக்கு ரூ.123 கோடி மனிதாபிமான உதவியை வழங்குவதாக தமிழக முதல்வர் ஸ்டாலின் முன்னதாக அறிவித்து இருந்தார். இந்த ஆண்டு ஜனவரி முதல் இலங்கைக்கான இந்திய அரசின் உதவி கிட்டத்தட்ட 4 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டியுள்ளது.

மோசமான பற்றாக்குறை மற்றும் மின்வெட்டு ஆகியவற்றுடன் போராடி வரும் இலங்கையின் 22 மில்லியன் மக்களுக்கு அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய அடுத்த ஆறு மாதங்களில் சுமார் 5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் தேவைப்படுகின்றன. தற்போதைய பொருளாதார நெருக்கடியை சமாளிக்க நிதி உதவி குறித்து நாடு தற்போது IMF மற்றும் பிற வெளிநாட்டு நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.