நம்பிக்கை இல்லாததால் தான் இந்த மாதிரி பேசி வருகிறார் ஸ்டாலின் -அமைச்சர் ஜெயக்குமார்

Default Image
  • பள்ளிக்கு நாளை எப்படி வருவேன் என்று எனக்கே தெரியாது என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
  • அவர் மீது நம்பிக்கை இல்லாததால் தான் இந்த மாதிரி பேசி வருகிறார் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

சென்னை சேத்துப்பட்டில் உள்ள எம்.சி.சி பள்ளியில் 1970-ஆம் ஆண்டு படித்த மாணவர்கள் 50 ஆண்டுக்கு பிறகு சந்திக்கும் நிகழ்வு தொடர்ந்து இரண்டு நாட்களாக நடைபெற்றது. இதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தன்னுடன் படித்த மாணவர்களை சந்தித்து பேசினார். தொடர்ந்து இரண்டு நாட்களாக சந்தித்தார்.

அப்பொழுது அவர் கூறுகையில், நான் இந்த பள்ளிக்கு துணை முதல்வராகவும், சென்னை மேயராகவும், எம்.எல்.ஏவாகவும் பல முறை வந்திருக்கிறேன்.தற்போது எதிர்க்கட்சி தலைவராக வந்திருக்கிறேன், நாளை எப்படி வருவேன் என்று எனக்கே தெரியாது என்று கூறினார்.இது குறித்து  அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், தான் படித்த பள்ளிக்கு சென்ற திமுக தலைவர் ஸ்டாலின், நாளைக்கு நான் எப்படி வருவேன் என்று எனக்கே தெரியவில்லை என்று கூறுகிறார். அவருக்கே அவர் மீது நம்பிக்கை இல்லாததால் தான் இந்த மாதிரி பேசி வருகிறார்.ஆனால் எங்களால் உறுதிபடக் கூறமுடியும் 2021 நாங்கள் தான் ஆட்சி அமைப்போம். ஆனால் ஸ்டாலின் ஏன் அவ்வாறு கூற தயங்குகிறார் என அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்