தூய்மை இந்தியா திட்டம் – குழு அமைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு!

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கிராமபுரங்களில் பணிகளை மேற்கொள்ள தொழில்நுட்ப குழு அமைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு.
தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கிராமபுரங்களில் பணிகளை மேற்கொள்ள தொழில்நுட்ப குழு அமைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கிராமப்புறங்களை தூய்மையாக வைத்துக்கொள்ள அரசு அமைத்துள்ள குழு ஆலோசனை வழங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திட்டத்தை செயல்படுத்த ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை இயக்குனர் தலைவராக செயல்படுவார். ஊரக வளர்ச்சி, ஊராட்சித்துறை கூடுதல் இயக்குனர் உறுப்பினர் செயலாளராகவும், 9 பேர் உறுப்பினர்களாகவும் இருப்பார்கள். மாவட்ட வாரியாக திட்டத்தை செயல்படுத்த ரூ.50 லட்சம் வரை நிதி ஒதுக்கி, அதன் நிலை குறித்து கண்காணிக்கவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தூய்மை இந்தியா திட்டம் – குழு அமைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு!#tngovt pic.twitter.com/5D4mogUZCH
— Dinasuvadu Tamil (@DinasuvaduTamil) December 28, 2021
லேட்டஸ்ட் செய்திகள்
பாஜகவில் இணைய போகிறாரா மீனா? தீயாய் பரவும் தகவல்!
June 25, 2025