தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று வேளாண் பட்ஜெட் மீதான விவாதங்களுக்கு அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பதில்.
தமிழக சட்டப்பேரவை கடந்த 13ம் தேதி சென்னை வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கில் தொடங்கியது. கடந்த 13-ஆம் தேதி பொது பட்ஜெட் தாக்கல், 14-ஆம் தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், கடந்த 16-ஆம் தேதி முதல் பொது பட்ஜெட் மீதான விவாதம் நேற்றுவரை நடைபெற்றது.
இந்த, இன்று தொடங்கியுள்ள தமிழ்நாடு சட்டப்பேரவையில் வேளாண் பட்ஜெட் மீதான விவாதங்களுக்கு அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பதிலளித்து பேசவுள்ளார். வரும் 23ம் தேதி முதல் பல்வேறு துறைகளின் மானியக்கோரிக்கைகள் மீதான விவாதம் தொடரும் என சபாநாயகர் அறிவித்திருந்தார்.
இன்று நடக்கும் சட்டப்பேரவையில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 வேளாண் சட்டம் உள்ளிட்ட முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என கூறப்படுகிறது. மேலும் , சட்டமன்றத்தில் இன்று புளியந்தோப்பு குடியிருப்பு முறைகேடு தொடர்பாக சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தை எழும்பூர் திமுக உறுப்பினர் பரந்தாமன் கொண்டு வந்துள்ளார் என்று தகவல் தெரிவிக்கப்படுகிறது.
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே…
சென்னை : இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'கூலி' என்கிற அதிரடி திரில்லர் திரைப்படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில்…
கர்நாடகா : நீண்டகாலமாக நிலுவையில் உள்ள ஒபுலாபுரம் சட்டவிரோத சுரங்க வழக்கில் கர்நாடக முன்னாள் அமைச்சர் மற்றும் 3 பேரை குற்றவாளிகள்…
சென்னை : தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான பண்டிகை கால முன்பணம் ரூ.10,000-லிருந்து ரூ.20,000-ஆக உயர்த்தி சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தநிலையில்,…