இனி கோயில் இட வாடகையை ஆன்லைனில் செலுத்தலாம் – அமைச்சர்

Minister Sekar Babu inaugurated the new facility at the office of the Commissioner of Hindu Religious Affairs, Nungapakkam, Chennai.

சென்னை நுங்கப்பாக்கம் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் புதிய வசதியை துவக்கி வைத்த அமைச்சர் சேகர் பாபு.

தமிழகத்தில் கோயில் இடத்துக்கான வாடகையை ஆன்லைனில் செலுத்தும் வசதியை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தொடங்கி வைத்தார். சென்னை நுங்கப்பாக்கம் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் புதிய வசதியை துவக்கி வைத்த அமைச்சர், கோயில் இடத்தில் உள்ள வாடைகைதாரர்கள் இணைய வழியில் வாடகை செலுத்தலாம் என தெரிவித்தார்.

இணையவழி வாடகை மூலம், எவ்வளவு வாடகை பெறப்படுகிறது என்பதை சுலபமாக தெரிந்துக்கொள்ளலாம் என்றும் இணையவழியில் வாடகை செலுத்த முடியாதவர்கள், நேரடியாக வாடகை செலுத்துவோரின் விவரங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதனைத்தொடர்ந்து பேசிய அவர், கூட்டத்தை கூட்ட மத்திய அரசிடம் இருந்து பாஜக அனுமதி வாங்கி தந்தால் கோயில்களை திறக்க தயார் என்றும் வழக்கு பதிய நீதிமன்றம் உத்தரவு அவசியமில்லை, எனினும் ஆவணங்கள் சரியாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தார்.