மூடப்பட்ட அறைகளில் சமூக இடைவெளி இல்லாமல் இருப்பது கொரோனாவை அதிவேகமாக பரப்பும் – பொது சுகாதார நிபுணர்

Public health expert Pradeep Kaur said the absence of social space in closed rooms would spread the corona exponentially.

மூடப்பட்ட அறைகளில் சமூக இடைவெளி இல்லாமல் இருப்பது கொரோனாவை அதிவேகமாக பரப்பும் என பொது சுகாதார நிபுணர் பிரதீப் கவுர் தெரிவித்துள்ளார்.

கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா பரவல் காரணமாக பொது முடக்கம் அமலில் இருந்தது. இந்நிலையில், சமீப காலமாக ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிற நிலையில், சமீபத்தில் 50 சதவிகித இருக்கைகளுடன் திரையரங்குகளை திறக்கலாம் என தமிழக முதல்வர் தெரிவித்திருந்த நிலையில், நேற்று 100% இருக்கைகளுடன் திரையரங்குகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பிற்கு வரவேற்பும், எதிர்ப்பும் எழுந்தது. இந்நிலையில், பொது சுகாதார நிபுணர் பிரதீப் கவுர் அவர்கள் கூறுகையில், ‘மூடப்பட்ட அறைகளில் சமூக இடைவெளி இல்லாமல் இருப்பது கொரோனாவை அதிவேகமாக பரப்பும் என்றும், இதுபோன்ற இடங்களை மக்கள் தவிர்ப்பது நல்லது.’ என தெரிவித்துள்ளார்.