கடல் நீரில் தாமரை நிச்சயமாக மலரும் என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 18ஆம் தேதி மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழகத்தில் உள்ள இரண்டு முக்கிய பிரதான கட்சிகளான அதிமுகவும், திமுகவும், தேசிய கட்சிகள் மாநில கட்சிகள் என பலமான கூட்டணியை வைத்து போட்டியிட உள்ளது.
இந்நிலையில் அதிமுக கூட்டணியில் உள்ள பாஜகவின் தூத்துக்குடி மக்களவை தேர்தலுக்கான வேட்பாளராக போட்டியிடுகிறார் அக்கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை போட்டியிடுகிறார்.அதேபோல் திமுக சார்பாக கனிமொழி போட்டியிடுகிறார்.
unknown nodeஇந்நிலையில் தூத்துக்குடியில் தூத்துக்குடி மக்களவை தொகுதி வேட்பாளரும்,தமிழக பாஜக தலைவருமான தமிழிசை வாக்கு சேகரித்து கொண்டிருந்தார்.உப்பு நீர் இங்குள்ள மக்களின் உயிர் நீராக உள்ளது, அந்த உயிர் நீரில் தாமரை நிச்சயமாக மலரும் என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.