ஈரோடு மாவட்டத்தில் எம்.ஜி.ஆர்.பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.இந்த பொதுக்கூட்டத்தில், அமைச்சர் கருப்பணன் பங்கேற்று பேசினார்.அவர் பேசுகையில்,, ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுக வெற்றிபெற்ற ஒன்றியங்களுக்கு அரசு குறைவான நிதியே ஒதுக்கும் என்று பேசினார்.அமைச்சரின் இந்த பேச்சுக்கு திமுக சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
இதன் ஒரு பகுதியாக திமுக பொருளாளர் துரைமுருகன் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு புகார் மனு ஒன்றை அனுப்பியுள்ளார்.அந்த மனுவில்,ஆட்சியின் மரபை மீறி அமைச்சர் கருப்பணன் பேசியுள்ளார் . உள்ளாட்சியில் திமுக வெற்றி பெற்ற ஒன்றியங்களுக்கு குறைவான நிதி ஒதுக்கப்படும் என்று அவர் பேசியுள்ளார். அமைச்சர் கருப்பணன் மரபை மீறி பேசியுள்ளார்.எனவே தமிழக அமைச்சரவையில் இருந்து கருப்பணனை உடனடியாக நீக்க வேண்டும்.இதற்கான நடவடிக்கையை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உடனே எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். அமைச்சர் கருப்பணன் பேசிய ஊடக ஆதாரங்களையும் இணைத்து அனுப்பியுள்ளார்.
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…
தர்மசாலா : இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் - டெல்லி அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகள் மோதும், 58வது போட்டி…
லாகூர் : பாகிஸ்தான் முழுவதும் 12 இடங்களில் இன்று இந்திய ட்ரோன்கள் தாக்குதல் நடத்தி உள்ளன. அதன்படி, லாகூர், குஜ்ரான்வாலா,…
தர்மசாலா : பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான இன்று தர்மசாலாவில் நடக்கவிருக்கும் போட்டி, மழைக் காரணமாக தாமதமாகியுள்ளது. தரம்ஷாலாவில்…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…