சென்னை: மீட்பு பணியில் ஈடுபட அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்புப் படையைச் சேர்ந்த 3 குழுக்கள் சென்னைக்கு விரைந்துள்ளனர்.
சென்னையில் சனிக்கிழமை இரவு கனமழை பெய்தது.சில இடங்களில் 20 செ.மீ-க்கும் அதிகமான மழை பதிவானது.இதனால்,பல இடங்களில் சாலைகளிலும்,வீடுகளிலும் மழைநீர் புகுந்து குளம் போல காட்சி அளிக்கிறது.இதனால்,மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து,முதல்வர் கடந்த 3 நாட்களாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார். இதனைத் தொடர்ந்து,மாநகராட்சி சார்பில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில்,சென்னையில் மீட்பு பணியில் ஈடுபட தேவையான அதிக நவீன கருவிகளுடன் அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்புப் படையைச் சேர்ந்த 3 குழுக்கள் விரைந்துள்ளனர்.அதன்படி,மழையால் அதிகம் பாதிக்கப்பட்ட மணலி,தாம்பரம்,பெரும்புலிபாக்கதிற்கு தலா ஒரு குழு என பேரிடர் மீட்பு படையை சேர்ந்த 3 குழுக்கள் விரைந்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து,தேசிய பேரிடர் மீட்புப் படையைச் சேர்ந்த 3 குழுக்கள் ஏற்கனவே புறப்பட்ட நிலையில் மேலும் 3 குழுக்கள் தயார் நிலையில் உள்ளன.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…