இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட வேண்டும் – கனிமொழி

Default Image

தீப்பெட்டி தொழிலாளர் மகன் மாரிஸ்வரனுக்கு வாழ்த்துகள் தெரிவித்துள்ளார் கனிமொழி. 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த தீப்பெட்டி தொழிலாளர் சக்திவேல் மகன் மாரீஸ்வரன்.இவர் இந்திய ஜீனியர் ஹாக்கி அணி பயிற்சி முகாமிற்கு தேர்வாகியுள்ளார்.வருகின்ற 25-ஆம் தேதி பெங்களூருவில் நடைபெற உள்ள பயிற்சி முகாமில் பங்கேற்க உள்ளார்.

இந்நிலையில் இது குறித்து திமுக எம்.பி. கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில், தேசிய அளவிலான ஹாக்கி பயிற்சி முகாமிற்கு தேர்வு செய்யப்பட்டிருக்கும் கோவில்பட்டியை சேர்ந்த தீப்பெட்டி தொழிலாளர் மகன் மாரிஸ்வரனுக்கு வாழ்த்துகள். அவர் இதில் சிறப்பாக விளையாடி இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட வேண்டும் என்பதே என்னைப்போன்ற பலருடைய ஆசை என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்