சில நாட்களுக்கு முன்னர் தான் சென்னை ஐஐடி கல்லூரியில் மாணவி பாத்திமா தற்கொலை செய்துகொண்டது தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளகியது. அந்த சம்பவத்திற்கான விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதற்குள் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பயின்று வரும் மாணவி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை உண்டாகியுள்ளது.
unknown nodeஅந்த மாணவி தற்கொலை முயற்சி செய்வதற்கு முன்னர் 2 பக்கம் கடிதம் எழுதி வைத்துவிட்டு பினாயில் குதித்துள்ளார். பின்னர் உயிருக்கு போராடிய அந்த மாணவி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு காப்பாற்றப்பட்டார்.
unknown nodeஇந்த சம்பவத்தை தொடர்ந்து அந்த மாணவி கடிதத்தில் குறிப்பிட்ட பேராசிரியரை கைது செய்ய கோரி மாணவர்கள் போராட்டம் நடத்தினர். அதில் தோல்வி ஏற்படவே, தற்போது பல்கலைகழக மாணவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து கல்லூரி பதிவாளர் தர்ணாவில் ஈடுபட்டு வரும் மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.