பாதாள சாக்கடை பணியின் போது விஷவாயு தாக்கி இரு தொழிலாளர்கள் பலி!

நாகை மாவட்டத்தில் அரசுக்கு சொந்தமான வீட்டு வசதி வாரியத்திற்கு உடைய குடியிருப்பு உள்ளது. இதில் பாதாள சாக்கடை தூர்வாரும் பணியில்  தொழிலாளர்கள்  ஈடுபட்டிருந்தனர்.

நாகை மாவட்டத்தில் அரசுக்கு சொந்தமான வீட்டு வசதி வாரியத்திற்கு உடைய குடியிருப்பு உள்ளது. இதில் பாதாள சாக்கடை தூர்வாரும் பணியில்  தொழிலாளர்கள்  ஈடுபட்டிருந்தனர்.

அப்போது விஷவாயு தாக்கி தொழிலாளர்கள் மஹாதேவன் மற்றும் சக்திவேல் ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் சந்தீப் என்பவர் மயக்கமடைந்து மருத்துவமனையில் ஆமஹ்திக்கப்பட்டுள்ளார். இந்த மருத்துவமனையில் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அதிகம் உள்ளனர். இதனால் மருத்துவமனையை சுற்றி காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.