#Breaking: முக்கிய பிரமுகர்கள் வருகையின் போது தடையில்லா மின்சாரம் – மின்வாரியம் சுற்றறிக்கை.!

ElectricityBillhike

முக்கிய பிரமுகர்கள் வருகையின் போது தடையில்லா மின்சாரம் வழங்க மின்வாரியம் சுற்றறிக்கை.

முக்கிய பிரமுகர்கள் வருகை தரக்கூடிய இடங்களில்தடையில்லா மின்சாரம் வழங்கப்படுவதை உறுதி செய்திட, அனைத்து மண்டல தலைமை பொறியாளர்களுக்கும் மின்சார வாரிய நிர்வாக இயக்குனர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

இது தொடரான வெளியான அறிக்கையில், நிகழ்ச்சிகள் நடைபெறும் பகுதிகளில் அவசர காலங்களைத் தவிர்த்து பராமரிப்பு பணி என்று மின்தடை செய்யக்கூடாது எனவும், முக்கிய பிரமுகர்கள் வருகையின் போது தடையில்லா மின்சாரத்தை உறுதி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சமீபத்தில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வருகையின் போது மின் தடை ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்