பிப்.25-ல் தமிழகம் வருகிறார் மத்திய அமைச்சர் அமித்ஷா.!
தமிழகம் வரும் அமித்ஷா ராமநாதபுரம், திருவண்ணாமலை உட்பட 5 மாவட்ட பாஜக அலுவலகங்களையும் திறந்து வைக்கவுள்ளார்.

டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வரும் 25 ஆம் தேதி கோவை வருகிறார். அங்கு மாவட்ட பாஜக அலுவலகத்தை திறந்து வைக்கவுள்ளார். மேலும், அங்கிருந்தபடி வீடியோ கான்பரன்சிங் மூலம் திருவண்ணாமலை, பெரம்பலூர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் கட்டப்பட்ட பாஜக அலுவலகங்களையும் திறந்து வைப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து 25 ஆம் தேதி அன்றிரவு கோவை ஈஷா மையத்தில் நடக்கும் சிவராத்திரி விழாவிலும் அவர் பங்கேற்கிறார். கோவை மாவட்டம் ஈஷா மையத்தில் பிப்ரவரி 26 (புதன்கிழமை) நிஷித கால் பூஜை அல்லது நள்ளிரவு வழிபாட்டுடன் கொண்டாடப்படவிருக்கிறது.
இந்த சிவராத்திரி விழா பிப்ரவரி 26, அதிகாலை 12:09 மணி முதல் பிப்ரவரி 27 அன்று அதிகாலை 12:59 மணி வரை திட்டமிடப்பட்டுள்ளது. மத்திய அமைச்சர் அமித்ஷா கோவை வருவதை ஒட்டி, அதற்கான ஏற்பாடுகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நேற்று முன் தினம் நடைபெற்றது. அமித் ஷா வருகைவோட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளவுள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
பெண்களை இழிவாக பேசிய விவகாரம்: “பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்க” – உயர்நீதிமன்றம் அதிரடி..!
April 17, 2025
வக்ஃப் திருத்த சட்டம்: ”இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது”- தவெக தலைவர் விஜய்.!
April 17, 2025
நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட டெல்லி பயிற்சியாளர்! எச்சரிக்கை கொடுத்து அபராதம் போட்ட பிசிசிஐ!
April 17, 2025
உச்சநீதிமன்றம் என்ன சூப்பர் நாடாளுமன்றமா? கட்டத்துடன் கேள்விகளை வைத்த துணை குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கர்!
April 17, 2025
கோவையில் தவெக பூத் கமிட்டி மாநாடு.! எப்போது தெரியுமா?
April 17, 2025