வைகை அணை 12 ஆண்டுகளுக்கு பிறகு முதல் போக சாகுபடிக்காக திறக்கப்பட்டிருப்பது தமிழக அரசின் மிக பெரிய வெற்றி என்று அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியுள்ளார்.
தேனி மாவட்டத்தில் உள்ள வைகை அணையிலிருந்து வரும் தண்ணீரால் சுற்று வட்டாரப்பகுதிகளில் 45,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதியை பெறும். இதிலிருந்து வரும் தண்ணீர் மதுரை, திண்டுக்கல், தேனி ஆகிய இடங்களில் உள்ள விவசாய நிலங்களுக்கு செல்லும். இந்த அணை 71 அடி உயரம் கொண்டது. மேலும் இதில் 67.5 அடி அளவிற்கு தண்ணீர் இருப்பு உள்ளது. இதனால் இங்கிருந்து பெரியார் பிரதான கால்வாய்க்கு இன்று தண்ணீர் திறந்து விடப்பட்டது.
இதிலிருந்து வரும் தண்ணீர் மதுரை, திண்டுக்கல், தேனி ஆகிய இடங்களில் உள்ள விவசாய நிலங்களுக்கு செல்லும். வைகை அணையின் 7 பெரிய மதகுகள் வழியாக ஜூன் மாத முதல் போக சாகுபடிக்காக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, வணிகவரித்துறை அமைச்சர் பி.மூர்த்தி, நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் தலைமையில் வைகை அணையை திறந்து வைத்தனர்.
இதை தொடர்ந்து பேசிய அமைச்சர் ஐ.பெரியசாமி, 14 வருடங்களுக்கு பிறகு முல்லை பெரியாறு அணையிலிருந்தும், 12 வருடங்களுக்கு பிறகு வைகை அணையிலிருந்தும் தண்ணீர் திறந்துவைக்கப்பட்டுள்ளது. இது திமுக ஆட்சியின் மிக பெரிய வெற்றி என்றும், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு சரித்திர சாதனை புரிந்துள்ளது என்றும் கூறியுள்ளார்.
வாஷிங்டன் : அமெரிக்காவும் சீனாவும் கூட்டாக தங்கள் தற்போதைய வரிகளில் ஒரு பகுதியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன.…
டெல்லி : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும் ‘தி…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதலுக்குப் பிறகு, நாட்டின் பாதுகாப்பு நோக்கங்களுக்காக இஸ்ரோவின் 10 செயற்கைக்கோள்கள் தொடர்ந்து கண்காணித்து…
சென்னை : தியாகராய நகர் (T.Nagar) ரங்கநாதன் தெருவில் உள்ள சோபா ஆடையகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவ…
சென்னை : சென்னை பரங்கிமலையில் கல்லூரி மாணவர்கள் இருவர் செல்போன் பேசியபடி தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் மோதி…
டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி ரோஹித் ஷர்மாவை தொடர்ந்து தானும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு…