வேலூர் தொகுதியில் பண பட்டுவாடா காரணமாக தேர்தல் ரத்து செய்யப்பட்டது .பின்னர் தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்தது.5- ஆம் தேதி வேலூர் மக்களவை தொகுதிக்கு ஆகஸ்ட் வாக்குபதிவு நடைபெறும் என்று தெரிவித்தது.
வேலூர் தேர்தலில் அதிமுக சார்பில் புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் ,திமுக சார்பில் கதிர் ஆனந்த் ,நாம் தமிழர் கட்சி சார்பில் தீப லட்சுமி போட்டியிடுகிறார்கள் .கடந்த சனிக்கிழமை மாலை 6 மணியுடன் பரப்புரை ஓய்ந்தது. நேற்று வேலூர் தொகுதியில் வாக்குப்பதிவு நடைபெற்றது.மக்கள் அனைவரும் மிகவும் ஆர்வமுடன் வாக்கு அளித்தார்கள். காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு சரியாக மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது.
இந்த நிலையில் வேலூர் மாவட்ட தேர்தல் அதிகாரி சண்முக சுந்தரம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், வேலூர் மக்களவை தேர்தலில் மொத்தமாக 72% வாக்குகள் பதிவாகி உள்ளன.
மொத்தமாக வாக்குபதிவு நடைபெற்றபோது 22 விவிபாட் இயந்திரங்கள் பழுதானது.வேலூரில் அமைதியான முறையில் தேர்தல் நடைபெற்றது. கடந்த தேர்தலை விட வாக்குபதிவு அளவு 4% குறைந்துள்ளது. பொதுமக்கள் 100 சதவிகித வாக்குப்பதிவுக்கு போதிய அளவு ஆர்வம் காட்டவில்லை என்பது தெரிகிறது என்று தெரிவித்தார்.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…