எந்த பட்டனை அழுத்தினாலும் பாஜகவுக்கு ஒட்டு.? சென்னை வாக்குசாவடியில் சலசலப்பு.!

Published by
மணிகண்டன்

Election2024 : வாக்கு இயந்திரத்தில் எந்த பட்டனை அழுத்தினாலும் பாஜகவுக்கு ஓட்டு விழுவதாக சென்னை வியாசர்பாடியில் குற்றசாட்டு எழுந்துள்ளது.

சென்னை வியாசர்பாடி எம்.கே.பி. நகர் பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளியின் 150வது வாக்குச்சாவடியில் எந்த பட்டனை அழுத்தினாலும் தாமரைக்கு லைட் எரிவதாக எழுந்த புகாரையடுத்து திமுக, அதிமுக பூத் முகவர்கள் தர்ணா

தமிழகத்தில் மொத்த முதல் 39 மக்களவைத் தொகுதிகள், புதுச்சேரி தொகுதி என 40 தொகுதிகள் உட்பட மொத்தம் நாடு முழுவதும் 102 தொகுதிகளில் முதற்கட்ட மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை 7 மணி முதல் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வாக்களித்து வருகின்றனர்.

வடசென்னை மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட வியாசர்பாடி பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் எந்த வாக்குப்பதிவு இயந்திரத்தில் எந்த பட்டனை அழுத்தினாலும் பாஜகவுக்கு வாக்கு விழுவதாக அங்கு குற்றசாட்டு எழுந்தது.

வியாசர்பாடி எம்.கே.பி நகர் பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளியில் 150ஆவது வாக்குசாவடியில் வாக்குப்பதிவு எந்திரத்தில் எந்த பட்டனை அழுத்தினாலும் பாஜகவுக்கு ஓட்டு விழுவதாக சிலர், அரசியல் கட்சி பிரமுகர்களிடம் புகார் அளித்துள்ளனர். இதனை அடுத்து, திமுக, அதிமுக அரசியல் கட்சி பிரமுகர்கள் அங்குள்ள தேர்தல் அதிகாரிகளிடம் குற்றசாட்டு குறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து எந்த பட்டனை அழுத்தினாலும் பாஜகவுக்கு ஓட்டு விழுவதாக புகார் கூறிய நபரை காவல்துறையினர், தேர்தல் அதிகாரிகள் அழைத்து தற்போது விசாரணை செய்து வருகின்றனர். உண்மையிலேயே அவ்வாறு நடந்ததா.? இல்லை அவர் பொய் புகார் கூறினாரா என்பது பற்றி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். வாக்குப்பதிவு இயந்திரத்தில் இவ்வாறான குளறுபடிகள் நடக்காது என தேர்தல் ஆணையம் தொடர்ந்து கூறி வருகிறது குறிப்பிடதக்கது.

Published by
மணிகண்டன்

Recent Posts

‘ரூ.1,000க்கு ஆசைப்பட்டு, நாங்கள் தரவிருந்த ரூ.1,500ஐ தவறவிட்டீர்கள்’ – எடப்பாடி பழனிசாமி.!

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் திருச்சிற்றம்பலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ரோடு ஷோ தொடங்கியது. அதன்படி, திருச்சிற்றம்பலம் கூட்ரோடு…

6 hours ago

திரும்ப வந்துட்டேன்னு சொல்லு.., 3வது பந்திலேயே விக்கெட் எடுத்து அசத்திய ஆர்ச்சர்.!

லார்ட்ஸ் : இங்கிலாந்தின் லார்ட்ஸில் நடந்த இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்டில், டாஸ் வென்று முதலில்…

6 hours ago

3வது டெஸ்ட்: பும்ரா மீண்டும் அபாரம்.., இங்கிலாந்து அணி 387 ரன்களுக்கு ஆல் அவுட்.!

லார்ட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 387 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும்…

7 hours ago

யானை சின்னம்: தவெக கொடிக்கு தடை கோரிய வழக்கு வாபஸ்.!

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கொடியில் யானை சின்னத்தைப் பயன்படுத்துவதற்கு இடைக்காலத் தடை கோரி பகுஜன் சமாஜ்…

7 hours ago

புதுச்சேரியில் புதிதாக 3 நியமன எம்எல்ஏக்கள் அறிவிப்பு.!

பாண்டிச்சேரி : புதுச்சேரியில் பாஜகவை சேர்ந்த தீப்பாய்ந்தான், ராஜசேகரன், செல்வம் ஆகிய மூன்று பேரை நியமன சட்டமன்ற உறுப்பினர்களாக நியமிக்க…

8 hours ago

பழனி செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு!! 31 நாள்களுக்கு ரோப் கார் இயங்காது – நிர்வாகம் அறிவிப்பு.!

திண்டுக்கல் : பழனி முருகன் கோயிலில் ரோப் கார் சேவை வரும் ஜூலை 15, 2025 முதல் 31 நாட்களுக்கு…

8 hours ago